புடவையை இழுத்து பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்

புடவையை இழுத்து பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்
Updated on
1 min read

நாசிக் / மும்பை: தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் முன்​னணி​யில் உள்ள டிசிஎஸ் நிறு​வனத்​தின் நாசிக் கிளை​யில் ‘அசோசி​யேட்' பணி​யில் சேர்ந்த அந்​தப் பெண், காவல்​ துறை​யிடம் அளித்துள்ள புகாரில் கூறி​யிருப்​ப​தாவது:

எனக்​குத் திரு​மண​மாகி சில காலமே ஆன நிலை​யில், பணியிடத்தில் சக ஊழியர்​கள் என்னை ஜீரோ ஃபிகர் என உருவக்கேலி செய்​தும், இந்து தெய்​வங்​களைப் பற்றி அவதூறாகப் பேசி​யும் துன்​புறுத்​தினர். எனது கணவர் புனே​வில் பணிபுரிவதால், நான் மாம​னார் வீட்​டில் தங்கி வேலைக்​குச் சென்று வந்​தேன்.

பயிற்​சிக் காலத்​தின்​போது, இதர பிரி​வில் பணிபுரிந்த ரசா மேனன் என்​பவர், அடிக்​கடி என்​னிடம் வந்து தனிப்​பட்ட வாழ்க்கை குறித்து ஆபாச​மாகப் பேசு​வார். உன் கணவர் தள்ளி இருக்​கிறார், உனக்​குப் பயமாக இல்​லை​யா? என்ன உதவி என்றாலும் என்னை அணுகு என்று கூறித் தொல்லை கொடுப்​பார்.

கடந்த மார்ச் மாதம் குடிபட்வா பண்​டிகை​யின்​போது, நான் புடவை அணிந்து வந்​திருந்​தேன். அப்​போது சிற்​றுண்டி அறை அருகே சென்​ற​போது, ரசா மேனன் எனது புட​வைத் தலைப்​பைப் பிடித்து இழுத்​தார். நான் அதிர்ச்​சி​யடைந்து அவரைப் பார்த்​த​போது, வக்​கிர​மான பார்​வை​யுடன் அவர் சிரித்​தார்.

மேலும், ஆசிப் அன்​சாரி என்ற மற்​றொரு ஊழியர், இருக்​கைகள் காலி​யாக இருந்​தும் வேண்​டும் என்றே அரு​கில் வந்து உட்​கார்ந்து கொண்​டு, கை, தொடை மற்​றும் தோள்​பட்​டை​யில் தகாத முறையில் தொடு​வதை வழக்​க​மாகக் கொண்​டிருந்​தார்.

திரு​மணத்​திற்கு முன்பு உனக்​குக் காதலர்​கள் இருந்​திருப்​பார்​கள், இப்​போது அது​போல ஒரு​வனை வைத்​துக்​கொண்​டால் என்ன ? என்று ஆபாச​மாகப் பேசி​யதுடன், மதமாற்ற முயற்​சி​யிலும் ஈடுபட்டார். இவ்​வாறு அதில் கூறியுள்​ளார். இதன் அடிப்படையில் நாசிக் சிறப்​புப் புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார், ஒரு பெண் மேலாளர் உட்பட 8 பேரைக் கைது செய்​துள்​ளனர்.

புடவையை இழுத்து பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்
ஓபிஎஸ் ஸ்டேட்டஸ்... போடி தொகுதி ‘பதம்’ பார்க்குமா, பதவி தருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in