அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

Updated on
2 min read

புதுடெல்லி: சொத்​துக் குவிப்பு வழக்​கில் மறு விசா​ரணை நடத்​தாமல் இருக்க, அரசு மருத்​து​வரிடம் லஞ்​சம் பெற்ற அமலாக்​கத் துறை அதி​காரி அங்​கித் திவாரி தொடர்​பான வழக்கை சிபிஐ வசம் ஒப்​படைக்​கலாம் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

திண்​டுக்​கல் அரசு மருத்​து​வர் சுரேஷ்​பாபு​விடம், வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துக்​களை குவித்த வழக்​கில் மறு விசா​ரணை நடத்​தாமல் இருக்க ரூ.20 லட்​சம் லஞ்​சம் பெற்​ற​தாக, மதுரை அமலாக்​கத் துறை அதி​காரி அங்​கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கடந்த 2023-ல் கைது செய்​தனர்.

மேலும், அமலாக்​கத் துறை அதி​காரி அங்​கித் திவாரி பணி​யாற்​றும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத் துறை​யின் உதவி மண்டல அலு​வல​கத்​தில், லஞ்ச ஒழிப்பு காவல் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில், அங்​கித் திவாரி லஞ்​சம் வாங்​கிய​தாக குற்​றம்​சாட்​டப்​பட்ட விவ​காரத்​தில், அமலாக்​கத் துறை தரப்​பிலும் வழக்​குப் பதிவு செய்​ததோடு, அங்​கித் திவாரி​யிடம் துறை ரீதி​யாக தங்​களது கட்​டுப்​பாட்​டில் விசா​ரிக்க அனு​ம​திக்க வேண்​டும். குறிப்​பாக, அவர் லஞ்சம் வாங்​கியது உண்​மை​தானா என்​பதை விசா​ரிக்க வேண்​டி​யுள்​ளது.

எனவே, அவரை அமலக்​கத் துறை வசம் ஒப்​படைக்க வேண்​டும் எனக்​கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை திண்​டுக்​கல் தலைமை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றம், தள்​ளு​படி செய்​தது.

இதைத் தொடர்ந்​து, அமலாகத் துறை தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு ரிட் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், லஞ்​சம் வாங்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் விவ​காரத்​தில் அங்​கித் திவாரியை துறை ரீதியி​லான கட்​டுப்​பாட்​டில் எடுத்து விசா​ரணை நடத்த உரிய உத்​தரவை பிறப்​பிக்க வேண்​டும்.

தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை விசா​ரணைக்கு தடை விதிக்க வேண்​டும் என்​றும் கோரிக்கை வைக்​கப்​பட்​டிருந்​தது. அந்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், அங்​கித் திவாரிக்கு எதி​ராக தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசா​ரணை நடத்​து​வதற்கு தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது. அதேவேளை​யில், அங்​கித் திவாரி உச்ச நீதி​மன்​றத்தை அணுகி இடைக்​கால ஜாமீன் பெற்​றார்.

இதனையடுத்​து, இது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் குரு கிருஷ்ணகு​மார் ஆஜராகி, அமலாக்​கத் துறை அதி​காரி​யான அங்​கித் திவாரி லஞ்​சம் பெற்று கையும் களவு​மாக பிடிபட்ட நிலை​யில், அமலாக்​கத்துறை தங்​கள் அதி​காரி மீது தவறாக வழக்கு பதி​யப்​பட்​டிருப்​ப​தாக தெரி​வித்து வரு​கின்​றனர், அப்​படி இருக்​கை​யில், அவர்​களின் விசா​ரணை​யில் எப்​படி உண்மை வெளிவரும்.

எனவே, அமலாக்​கத் துறை அதி​காரி அங்​கித் திவாரி லஞ்​சம் பெற்ற வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையே விசா​ரணை செய்ய அனு​ம​திக்க வேண்​டும். அதற்கு ஏது​வாக உச்ச நீதி​மன்​றம் விதித்​துள்ள தடை உத்​தரவை நீக்க வேண்​டுமென வலி​யுறுத்​தி​யதோடு, இந்த விவ​காரத்​தில் தமிழக காவல் துறைக்​கான விசா​ரணை அதி​கார வரம்பை விட்​டுக்கொடுக்க இயலாது என்​றும் தெரி​வித்​தார்.

குற்றச்சாட்டு உண்மையானதா? - ஆனால், தமிழக அரசின் கோரிக்​கையை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், அமலாக்​கத் துறை அதி​காரி லஞ்​சம் பெற்ற வழக்கு விசா​ரணையை விட்​டுக்கொடுக்க மாட்​டோம் என்று மாநில அரசு உறு​தி​யுடன் தெரி​வித்து வரு​கிறது.

அதே வேளை​யில், அமலாக்​கத் துறை அதி​காரி மீதான குற்​றச்​சாட்டு உண்​மை​யானதா என்​பதை முதலில் அறிந்து கொள்ள வேண்​டியது அவசி​ய​மாகிறது. அங்​கித் திவாரி மீதான குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரம் இருக்​கும் பட்​சத்​தில், அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்​படைக்​கலாம் என தெரி​வித்​தனர்.

அப்​போது, அமலக்​கத்​ துறை தரப்​பில்​ வழக்​கை வேறு தேதிக்​கு ஒத்​திவைக்​க வேண்​டுமென கோரிக்​கை வைக்​கப்​பட்​டது. இதனையடுத்​து, வழக்​கு வி​சா​ரணை இரண்​டு ​வார ​காலத்​துக்​கு ஒத்​தி வைக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p><em><ins>உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்</ins></em></p></div>
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in