டெல்லியில் 100 அடல் உணவகம்: ரூ.5-க்கு சாப்பாடு விற்பனை

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 100 ‘அடல்' உணவகங்களை நேற்று திறந்து வைத்து முதல்வர் ரேகா குப்தா உணவு அருந்தினார். இங்கு, ரூ.5-க்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 100 ‘அடல்' உணவகங்களை நேற்று திறந்து வைத்து முதல்வர் ரேகா குப்தா உணவு அருந்தினார். இங்கு, ரூ.5-க்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது.

Updated on
1 min read

புதுடெல்லி: முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு டெல்​லி​யில் 100 அடல் உணவகங்​களை முதல்​வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்​தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தின​மும் இரண்டு வேளை உணவு கிடைக்க போ​ராடும் மக்​களுக்கு திருப்​தி​யான உணவு பத்​தில் ஒரு பங்கு விலை​யில் கிடைத்​தால் எப்​படி சந்​தோஷப்​படு​வார்​கள் என்​பதை கற்​பனை செய்து பாருங்​கள். டெல்லி அரசு தற்​போது அந்த கனவை நனவாக்​கி​யுள்​ளது.

அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு வழங்​கும். வெறும் 5 ரூபாய்க்கு வழங்​கப்​படும் உணவில் பருப்​பு,சாதம், சப்​பாத்​தி, அந்​தந்​தப் பரு​வத்​திற்​குரிய காய்​கறி மற்​றும் ஊறு​காய் ஆகியவை இருக்​கும். அடல் உணவகம் டெல்​லி​யின் ஆன்​மா​வாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 100 ‘அடல்' உணவகங்களை நேற்று திறந்து வைத்து முதல்வர் ரேகா குப்தா உணவு அருந்தினார். இங்கு, ரூ.5-க்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது.</p></div>
“பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்துவதால் வாக்கு மதிப்பும் உயர்கிறது” - சீமான் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in