“பூமி​யில் மனிதர்கள் இடையிலான வாக்குவாதங்கள் முட்டாள்தனமாக தோன்​றும்” - சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி அனுபவம்

“பூமி​யில் மனிதர்கள் இடையிலான வாக்குவாதங்கள் முட்டாள்தனமாக தோன்​றும்” - சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி அனுபவம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாசா​வில் 27 ஆண்டு காலம் பணி​யாற்​றிய​வர் விண்​வெளி வீராங்​கனை சுனிதா வில்​லி​யம்​ஸ்​ (60). இந்​திய வம்சாவளியைச் சேர்ந்​த இவர் 3 முறை விண்​வெளி மையத்​துக்கு சென்று மொத்​தம் 608 நாட்​கள் தங்கியுள்ளார்.

சர்வதேச விண்​வெளி மையத்​தில் நீண்ட காலம் தங்கியிருந்த நாசா வீரர்​களில் இவர் இரண்​டாம் இடத்​தில் உள்​ளார். இவர் கடைசி​யாக போயிங் நிறு​வனத்​தின் சோதனை விண்​கலம் ஸ்டார்லைனரில் 8 நாள் பயண​மாக சர்​வ​தேச விண்​வெளி மையம் சென்​றார். ஆனால் அதில் தொழில்​நுட்ப கோளாறு ஏற்பட்ட​தால் அவர் அங்கு தொடர்ந்து 286 நாட்​கள் தங்க வேண்​டிய சூழல் ஏற்​பட்​டது.

பின்​னர் இவர் ஸ்பேஸ் எக்ஸ் விண்​கலத்​தில் பூமி திரும்​பி​னார். இவர் சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் தங்​கி​யிருந்​த ​போது 9 முறை விண்​வெளி நடைபயணம் மேற்கொண்டுள்​ளார். கடந்தாண்டு டிசம்​பர் 27-ம் தேதி இவர் நாசா​வில் இருந்து ஓய்வு பெற்றார். தற்​போது இந்தியா வந்​துள்ள சுனிதா வில்​லி​யம் டெல்லியில் உள்ள அமெரிக்​கன் மையத்​தில் நடை​பெற்ற கலந்துரை​யாடல் நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்​றார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: விண்​வெளி பயணம் என்பது ஒரு குழு விளை​யாட்​டு. இதில் அனைத்து நாட்டு விஞ்​ஞானிகளிடம் ஒன்​றிணைந்து ‘இது நமது கிரகம், நாம் விண்​வெளி​யில் ஒன்​றாக உள்​ளோம்’ என்ற உணர்​வுடன் பணி​யாற்ற வேண்​டும். விண்வெளிக்கு சென்​றவுடன் நமது நாடு எங்​குள்​ளது என பார்க்க விரும்​புவோம். எனது தந்தை இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர், தாய் ஸ்லோவேனி​யா​வைச் சேர்ந்​தவர்.

எனவே, நான் இந்த இடங்​களை விண்​ணில் இருந்து பார்ப்பேன். நமது பூமி கோள் உயிர்ப்​புடன் இருக்​கிறது. சிலர் இவற்றை வெறும் பாறை​களாக பார்க்​கலாம். ஆனால், இது நகர்ந்து கொண்டிருக்​கிறது. பல காலநிலைகளை சந்​திக்​கிறது. கடலின் நிறத்​தில் மாற்​றம் ஏற்​படு​கிறது. பூமி​யின் வட மற்​றும் தென் துருவத்​தில் பனிக்​கட்​டிகள் சூழ்ந்​திருப்​பதை பார்க்​கலாம்.

நமது பூமி பார்க்க மிக அழகாக இருக்​கும். விண்​ணில் இருந்து பூமியை பார்க்​கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்​ணங்​கள் மாறு​படும். நாம் அனை​வரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்​தவர், நாம் ஒன்​றிணைந்​து, எளி​தாக பணி​யாற்ற வேண்​டும் என உணர வைக்கும். பூமி​யில் மனிதர்கள் இடையே ஏற்​படும் வாக்குவாதங்​கள் எல்லாம் முட்டாள்​தன​மாக தோன்​றும். இவ்​வாறு சுனிதா கூறினார்.

“பூமி​யில் மனிதர்கள் இடையிலான வாக்குவாதங்கள் முட்டாள்தனமாக தோன்​றும்” - சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி அனுபவம்
“தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்” - பியூஷ் கோயல் சந்திப்புக்குப் பின் பழனிசாமி பேட்டி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in