செங்கோட்டை குண்டுவெடிப்பு: மூளையாக செயல்பட்ட முசாபர் ரத்தரை பிடிக்க இன்டர்போல் உதவி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே நிகழ்ந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துக்கு மூளை​யாக செயல்​பட்​ட​தாக கூறப்​படும் முசாபர் ரத்​தரை பிடிக்க இண்​டர்​போல் உதவி கோரப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, இண்​டர்​போல் அமைப்பு ரத்​தருக்கு எதி​ராக ரெட் கார்​னர் நோட்​டீஸை பிறப்​பித்​துள்​ளது.

முசாபர் ரத்​தர் தெற்கு காஷ்மீரை சேர்ந்த குழந்தை நல மருத்​து​வர். இவர் ஏற்​கெனவே என்ஐஏ சிறப்பு நீதி​மன்​றத்​தால் தேடப்​படும் குற்​ற​வாளி​யாக அறிவிக்​கப்​பட்​ட​வர். கடந்​தாண்டு நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டை வெடிக்​கச் செய்​த​தில் 12-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். இந்த தீவிர​வாத செயலில் ஈடு​பட்ட மருத்​து​வர் உமர்​-உன்​-நபி​யின் நெருங்​கிய கூட்​டாளி​யாக ரத்​தர் இருந்​துள்​ளார்.

இந்​தி​யா​விலிருந்து தப்​பிச் சென்ற ரத்​தர், தற்​போது ஆப்​கானிஸ்​தானில் பதுங்​கி​யிருப்​ப​தாக சந்​தேகிக்​கப்​படு​கிறது. அங்​கிருந்தே அவர் இந்த தாக்​குதலை ஒருங்​கிணைத்​த​தாக புல​னாய்வு அமைப்​பு​கள் தெரி​வித்​துள்​ளன. ரத்​தர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மத்​தி​யில் டெல்லி செங்​கோட்டை குண்டு வெடிப்​புக்கு சற்று முன்​ன​தாக இந்​தி​யாவை விட்டு வெளி​யேறி​யுள்​ளார். முதலில் துபாய்க்​குச் சென்ற அவர் தற்​போது ஆப்​கானிஸ்​தானில் தலைமறை​வாக உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
இது தேர்தல் அல்ல, போர்: தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக பாதுகாக்கும்: ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in