“நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்” - ராகுல் காந்தி

10 ஆண்​டில் 152 முறை வினாத்​தாள் கசிவு
“நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்” - ராகுல் காந்தி
Updated on
2 min read

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்​தாள் மோசடி விவ​காரத்​தில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது தடியடி நடத்​திய விஷயத்தில் பிரதமர் மோடி மன்​னிப்பு கோர வேண்​டும் என்று மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு தொடர்​பான விவ​காரத்​தில் மாணவர்​கள் கடந்த திங்​கள்​ கிழமை டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தினர். அவர்​கள் மீது பாது​காப்​புப் படை​யினர், போலீ​ஸார் தடியடி நடத்தி விரட்​டினர். இதைக் கண்​டித்து நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்​யப்​பட்டு பின்​னர் விடுவிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில் டெல்லி காங்​கிரஸ் கட்​சித் தலை​மையகத்​தில் நடைபெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் ராகுல் காந்தி கூறியதாவது: நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்பாக மாணவர்​கள் அமை​தி​யான வழி​யில் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

ஆனால் அவர்​கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நமது நாட்​டில், கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்​டது. கடந்த 10 ஆண்​டு​களில் பல்​வேறு தேர்​வு​களில் 152 முறை வினாத்​தாள் கசிந்​துள்​ளன. இதில் சம்பந்தப்​பட்ட குற்​ற​வாளி​கள் யாரும் இது​வரை கைது செய்யப்பட​வில்​லை. அவர்​கள் தண்​டிக்​கப்​பட​வும் இல்​லை.

தேர்​வு​களில் நடை​பெறும் மோசடிகளால் இளைஞர்​கள் எதிர்காலத்​தைத் தொலைக்​கின்​றனர். நீட் தேர்வு காரண​மாக ஓராண்​டுக்கு 1.32 லட்​சம் கோடி புழங்​கு​கிறது. வினாத்​தாள் கசிவு காரண​மாக மறு தேர்வு எழுதும் மாணவர்​கள் மன அழுத்​தத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

மாணவர்​களின் முக்​கிய 3 கோரிக்​கைகளை ஏற்​றால் போராட்​டம் முடிவுக்கு வரும். முதலா​வ​தாக மத்​திய கல்வி அமைச்​ச​ராக தோல்வி அடைந்​தவரும், ஊழல்​வாதி என அறியப்​பட்​ட​வரு​மான தர்​மேந்​திர பிர​தானை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும். இரண்டாவ​தாக மாணவர்​கள் மீது கை நீட்​டிய ஒவ்​வொரு நபரும் (போலீஸார்) பொறுப்​பேற்க வைக்​கப்பட வேண்​டும். 3-வ​தாக இதற்​கெல்​லாம் பொறுப்​பேற்க வேண்​டிய​வர் (பிரதமர் மோடி), மாணவர்​களிடம் மன்​னிப்​புக் கேட்க வேண்​டும்.

இந்​தக் கோரிக்​கைகளை நாங்​கள் முழு​மை​யாக ஆதரிக்​கிறோம், நமது நாட்​டின் மிகப்​பெரிய சொத்து என்று நினைக்​கப்​படும் கல்வி முறை​யானது, தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசின் காலத்தில் முற்​றி​லும் சிதைந்​து​விட்​டது. ஏழைகளுக்​கும், நடுத்தர வகுப்பு மக்​களுக்​கும் ஏற்ற வகை​யில் நமது கல்வி முறையை மாற்ற வேண்​டும். மாணவர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்​திய சம்​பவத்​துக்கு அவர்​களிடம் பிரதமர்​ மோடி மன்​னிப்​பு கோர ​வேண்​டும்​.இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்.

பிரியங்கா வேதனை:

நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவரையோ அல்லது பிற கட்சித் தலைவர்களையோ பேச விடுவதில்லை. விவாதம் நடத்துவது குறித்து அரசிடம் கேட்டுச் சொல்வதாக மக்களவைத் தலைவர் கூறுகிறார். இது என்ன நடைமுறை? நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது.

நாட்டின் இளைஞர்களுக்கான முழு கல்வி பட்ஜெட் ரூ.1.4 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், அதானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன்களை அரசு தள்ளுபடி செய்கிறது. விவசாயிகள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கட்டமைக்கக் கடுமையாகப் போராடுகிறார்கள்; ஆனால், அவர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

“நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்” - ராகுல் காந்தி
மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து ராகுல், அகிலேஷ் தலைமையில் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in