ராஜஸ்தானுக்கு வந்த ராகுல், பிரியங்கா காந்தி

ராஜஸ்தானுக்கு வந்த ராகுல், பிரியங்கா காந்தி
Updated on
1 min read

புத்​தாண்​டையொட்டி ராஜஸ்​தானில் சுற்​றுலாப் பயணி​களின் கூட்​டம் அலைமோதும் நிலை​யில் காங்​கிரஸ் தலை​வர்​கள் ராகுல், பிரி​யங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்​களது குடும்ப உறுப்​பினர்​களு​டன் நேற்று ரந்​தம்​போருக்கு வருகை தந்​தனர்.

சவாய் மாதோபூர் மாவட்​டத்​தில் உள்​ளது ரந்​தம்​போர் சரணால​யம். இது புலிகள் மற்​றும் செழு​மை​யான பல்​லு​யிர் பெருக்​கத்​திற்​கான முக்​கிய இடமாகும். மேலும், இது, சுற்​றுலாப் பயணி​களுக்கு மிக விருப்​ப​மான சுற்​றுலாத் தலமாக விளங்​கு​கிறது.

ஜெய்ப்​பூர், ஜெய்​சால்​மர், உதய்​பூர், ஜோத்​பூர் மற்​றும் முக்​கிய மத வழி​பாட்டு தலங்​கள் அனைத்​தி​லும் புத்​தாண்டை முன்​னிட்டு சுற்​றுலாப் பயணி​களின் வருகை அதி​கரித்​துள்​ளது. மாநிலம் முழு​வதும் உள்ள ஹோட்​டல்​கள், ரிசார்ட்​டு​கள் மற்​றும் பாரம்​பரிய சொகுசு விடு​தி​கள் முழு​மை​யாக நிரம்​பி​விட்​டன. தங்​கும் விடு​தி​களுக்​கான கட்​ட​ணங்​கள் பல மடங்கு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

போக்​கு​வரத்து மற்​றும் பாது​காப்பை நிர்​வகிக்க, ஜெய்ப்​பூர் மற்​றும் பிற நகரங்​களில் போக்​கு​வரத்​தில் மாற்​றங்​கள் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்த நிலை​யில், புத்​தாண்டு பிறப்​ப​தையொட்டி ராகுல் மற்​றும் பிரி​யங்கா குடும்​பத்​தினரும் ராஜஸ்​தானில் சுற்​றுலா மேற்​கொள்​வதற்​காக நேற்று ரந்​தம்​போரை வந்​தடைந்​தனர்​.

ராஜஸ்தானுக்கு வந்த ராகுல், பிரியங்கா காந்தி
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in