பஞ்சாப் முன்னாள் அமைச்சர் புல்லர் கைது - அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டிய புகாரில் நடவடிக்கை

முன்னாள் அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் | கோப்புப் படம்

முன்னாள் அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் | கோப்புப் படம்

Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாபில் ஓர் அரசு அதி​காரியை தற்கொலைக்​குத் தூண்​டிய புகாரில் அமைச்​சர் பதவியை ராஜினாமா செய்த லால்​ஜித் சிங் புல்​லர் இன்று கைது செய்யப்பட்டார்.

பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸில் உள்ள மாநிலக் கிடங்கு கழக மேலா​ளராக இருந்த ககன்​தீப் சிங் ரந்​தாவா சமீபத்தில் தற்​கொலை செய்து கொண்​டார். அவர் பேசும் வீடியோ கடந்த சனிக்கிழமை சமூக வலை​தளங்​களில் வெளி​யானது. அதில், தான் விஷம் அருந்​தி​விட்​ட​தாக​வும், அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் தனக்கு தொல்லை கொடுத்​த​தாக​வும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், முதல்​வர் பகவந்த் மான் கேட்​டுக் கொண்டதற்​கிணங்க, அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். தரன் தரன் மாவட்​டத்​தில் உள்ள பட்டி தொகுதி எம்எல்ஏவான புல்​லர், தனது முகநூல் பதி​வில், ‘‘என் மீதான குற்​றச்​சாட்​டில் உண்மை இல்​லை. எனது கட்சி எப்​போதும் உண்​மை​யின் பக்​கம் நிற்​கும். எனவே என் மீதான குற்​றச்​சாட்​டு​கள் முறை​யாக விசா​ரிக்​கப்பட வேண்​டும் என்று விரும்​பு​கிறேன்.

இந்த விசா​ரணை முடி​யும் வரை, எனது ராஜி​னா​மாவை ஏற்​கு​மாறு கட்​சி​யை​யும் முதல்​வரை​யும் கேட்​டுக் கொள்​கிறேன்’’ என்று தெரி​வித்​திருந்தார்.

புல்​லரின் ராஜி​னாமா குறித்த செய்​தி​யாளர்​களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பகவந்த் மான், ‘‘இந்த சம்பவம் குறித்து விசா​ரணை நடத்​து​மாறு தலை​மைச் செய​லா​ள​ருக்கு உத்​தர​விட்​டுள்ளேன். இதன் பின்னணியில் உள்ள காரணங்​கள் என்ன என்​பது விசா​ரணை​யில் தெரிய வரும். விசாரணைக்கு முன்​ன​தாகவே அமைச்சரின் ராஜி​னா​மாவை நாங்​கள் பெற்​றுக் கொண்​டோம். இதனால் விசா​ரணை​யில் யாரும் தலை​யிடவோ அல்​லது அழுத்​தம் கொடுக்​கவோ முடி​யாது’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லால்ஜித் சிங் புல்லரை கைது செய்ய வலியுறுத்தி சண்டிகரில் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் பகவந்த் மானின் இல்லத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதோடு, இந்த விவகாரத்தை அமிர்தசரஸைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி குரு்ஜீத் சிங் அவ்லா, மக்களவையில் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுத்துபூர்வமாக தன்னிடம் கோரிக்கை வைத்தால், சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடுவதாகக் கூறினார்.

அமித் ஷா இவ்வாறு கூறிய இரண்டு மணி நேரத்துக்குள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கைது செய்யப்பட்டார். பட்டேகர் சாகிப் மாவட்டத்தின் மாண்டி கோபின்கர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>முன்னாள் அமைச்​சர் லால்​ஜித் சிங் புல்​லர் | கோப்புப் படம்</p></div>
“வட மாநிலங்களில் ராமர்... மேற்கு வங்கத்தில் காளி” - பாஜகவை விமர்சித்த திரிணமூல் காங். மூத்த தலைவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in