எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
2 min read

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை கண்​டித்​து, நாடாளு​மன்​றத்​தில் நேற்று 2-வது நாளாக இண்​டியா கூட்​டணி கட்​சி​யினர் அமளி​யில் ஈடு​பட்​டனர். நாடாளு​மன்​றத்​துக்கு வெளி​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் காங்​கிரஸ் தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, மல்​லி​கார்​ஜுன கார்கே மற்​றும் கூட்​டணி கட்​சிகளை சேர்ந்த எம்​.பி.க்​கள் பங்​கேற்​றனர்.

நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. இரண்​டாம் நாளான நேற்று காலை 11 மணிக்கு மக்​களவை கூடியது. அப்​போது காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள், வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு (எஸ்​ஐஆர்) எதி​ராக கோஷமிட்​டனர். எம்​.பி.க்​கள் அமைதி காக்​கு​மாறு அவைத் தலை​வர் ஓம் பிர்லா வேண்​டு​கோள் விடுத்​தார். ஆனால், எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்​ட​தால் மதி​யம் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது

மக்​களவை மீண்​டும் கூடிய போது, எஸ்​ஐஆர் பணி மூலம் வாக்கு திருட்டு நடை​பெறுகிறது என்று எதிர்க்​கட்​சி​யினர் மீண்​டும் கோஷம் எழுப்​பினர். எஸ்​ஐஆர் தொடர்​பாக அவை​யில் உடனடி​யாக விவாதம் நடத்த வேண்​டும் என்​றும் அவர்​கள் வலி​யுறுத்​தினர். இதுகுறித்து நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, “தேர்​தலில் வெற்​றி, தோல்வி இயல்​பானது. ஆனால், சில கட்​சிகள் தேர்​தல் தோல்வி விரக்​தி​யால் நாடாளு​மன்​றத்தை முடக்கி வரு​கின்​றன. எந்​தவொரு விவ​காரம் குறித்​தும் விவாதம் நடத்த மத்​திய அரசு தயா​ராக இருக்​கிறது” என்று தெரி​வித்​தார்.

அமைச்​சரின் விளக்​கத்தை ஏற்க மறுத்து எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்​டதால் நாள் முழு​வதும் அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவையிலும் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் அமளி​யில் ஈடு​பட்​டனர். பின்னர் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் வெளிநடப்பு செய்​தனர்.

இதுதொடர்​பாக மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறும்​போது, “கடந்த காலத்​தில் மணிப்​பூர் கலவரம் தொடர்​பாக எதிர்க்​கட்​சிகள் மாநிலங்​களவை​யில் நாடகம் நடத்​தின. தற்​போது மணிப்​பூர் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்​காமல் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் வெளிநடப்பு செய்​துள்​ளனர்” என்று குற்​றம் சாட்​டி​னார்.

இறு​தி​யில் மணிப்​பூர் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்​களவை​யில் நிறைவேற்​றப்​பட்​டது. மாலை 4 மணி அளவில் மாநிலங்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மக்​களவையை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக அவைத் தலை​வர் ஓம் பிர்லா தலை​மை​யில் நேற்று பிற்​பகலில் அனைத்து கட்சி கூட்​டம் நடை​பெற்​றது. இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இதுதொடர்​பாக நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

தேர்​தல் சீர்​திருத்​த விவாதம்: மக்​கள​வைத் தலை​வர் தலை​மை​யில் அனைத்து கட்சி கூட்​டம் நடை​பெற்​றது. வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி டிசம்​பர் 8-ம் தேதி மதி​யம் 12 மணிக்கு மக்​களவை​யில் சிறப்பு விவாதம் தொடங்​கும். இதே​போல தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பாக டிசம்​பர் 9-ம் தேதி மதி​யம் 12 மணிக்கு மக்​களவை​யில் சிறப்பு விவாதம் தொடங்​கப்​படும். இவ்​வாறு அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “வந்தே மாதரம் தேசிய பாடல் மீதான விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்​பார். இந்த விவாதம் 10 மணி நேரம் நடை​பெறும். டிசம்​பர் 9-ம் தேதி தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பான விவாதம் நடை​பெறும். இந்த விவாதத்​தின் இறு​தி​யில் மத்​திய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் பதில் அளிப்​பார்” என்று தெரி​வித்​தன.

நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று தொடங்​கு​வதற்கு முன்​பாக இண்டியா கூட்டணி சார்​பில் நாடாளு​மன்ற வளாகத்​தில் எஸ்​ஐஆர் பணியை கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. காங்​கிரஸ் தலை​வர் கார்கே தலைமை வகித்​தார். சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி மற்​றும் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் பங்​கேற்​றனர்.

இதுகுறித்து மல்​லி​கார்​ஜுன கார்கே கூறும்​போது, “எஸ்​ஐஆர் பணியை எதிர்த்து நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வோம். ஜனநாயகத்தை காப்​பாற்​ற​வும் நீதியை நிலை​நாட்​ட​வும் எங்​களது ஆர்ப்​பாட்​டம் தொடரும்” என்று தெரி​வித்​தார்.

சமாஜ்​வா​தி, திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள்​ பங்​கேற்​க​வில்​லை. காங்​கிரஸை புறக்​கணிக்​கும்​ வகை​யில்​ இருகட்​சிகளும்​ ஆர்ப்​பாட்​டத்​தில் பங்கேற்கவில்லை என்​று கூறப்​படுகிறது.

எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: இண்டியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘வேள்பாரி’ நாயகன் யார்? - இணையத்தில் விவாதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in