மகாராஷ்டிராவில் சாலை வசதி இல்லாததால் 6 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் சாலை வசதி இல்லாததால் 6 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு
Updated on
1 min read

கட்சிரோலி: மகா​ராஷ்டிர மாநிலம் கட்​சிரோலி மாவட்​டம் ஆல்​டண்டி டோலா கிராமத்​தைச் சேர்ந்த ஆஷா சந்​தோஷ் கிரங்கா (24) 9 மாத கர்ப்​பிணி​யாக இருந்​தார். அவரது கிராமத்​துக்கு சாலை வசதி இல்​லை. அதே​நேரம், அங்கு மருத்​து​வ வசதி​களும் இல்​லை.

இந்​நிலை​யில், பிரசவ வலிக்கு முன்பே சாலை வசி உள்ள பெத்தா என்ற ஊரில் உள்ள தனது சகோ​தரி​யின் வீட்​டுக்கு செல்ல முடிவு செய்​தார். அதற்​காக அந்​தப் பெண் ஜனவரி 1-ஆம் தேதி தனது கணவருடன் காடு​களின் வழி​யாக 6 கிலோமீட்​டர் தூரம் நடந்து சென்​றுள்​ளார்.

ஜனவரி 2-ஆம் தேதி காலை​யில் அவருக்​குக் கடுமை​யான பிரசவ வலி ஏற்​பட்​டுள்​ளது. அவர் ஆம்​புலன்ஸ் மூலம் ஹெத்​ரி​யில் உள்ள காளி அம்​மாள் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டார். மருத்​து​வர்​கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய முடிவு செய்​தனர். எனினும், அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், காலம் கடந்​து​விட்​ட​தாக​வும் குழந்தை ஏற்​கெனவே கருப்​பை​யிலேயே இறந்​து​விட்​ட​தாக​வும் தெரி​வித்​தனர். மேலும் ரத்த அழுத்​தம் அதி​கரித்​த​தால், அந்​தப் பெண்​ணும் சிறிது நேரத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து கட்​சிரோலி மாவட்ட சுகா​தார அதி​காரி டாக்​டர் பிர​தாப் ஷிண்டே கூறும்​போது, “அந்​தப் பெண் ஆஷா பணி​யாளர்​கள் மூலம் பதிவு செய்​யப்​பட்​ட​வர். திடீர் பிரசவ வலி​யும் சிக்​கல்​களும் அவர் நடந்​ததன் காரண​மாக ஏற்​பட்​டிருக்​கலாம். மருத்​து​வர்​கள் அவரைக் காப்​பாற்ற முயன்​றனர், ஆனால் அது பலனளிக்​க​வில்​லை. சுகா​தார அதி​காரி​யிட​மிருந்து விரி​வான அறிக்கை கோரப்​பட்​டுள்​ளது, இது குறித்து வி​சா​ரணை நடத்​தப்​படும்​” என்​றார்​.

மகாராஷ்டிராவில் சாலை வசதி இல்லாததால் 6 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு
தினமும் வேலைக்கு செல்லும் முன் சிறுவனை சங்கிலியால் கட்டிவைத்த பெற்றோர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in