நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய மக்கள் தொகை கொள்கையை வகுக்க வேண்டும்: டெல்லி பாஜக எம்.பி. பிரவீன்

பிரதமர் மோடிக்கு கடிதம்
டெல்லி பாஜக எம்.பி.பிரவீன்

டெல்லி பாஜக எம்.பி.பிரவீன்

Updated on
1 min read

புதுடெல்லி: நிலை​யான, சீரான வளர்ச்​சியை உறுதி செய்​யும் வகை​யில் தேசிய மக்​கள் தொகை மேலாண்​மைக் கொள்​கையை வகுக்க வேண்​டும் என பாஜக எம்​.பி. வலி​யுறுத்தி உள்​ளார்.

டெல்லி சாந்​தினி சவுக் மக்​கள​வைத் தொகுதி பாஜக எம்.பி.பிரவீன் கண்​டேல்​வால் பிரதமர் நரேந்​திர மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: “நம் நாட்டின் மக்​கள் தொகை 140 கோடியைத் தாண்டி உள்​ளது. மக்கள் தொகை என்​பது ஒரு மதிப்​புமிக்க சொத்து மற்​றும் மகத்தான மனித மூலதனத்​தின் ஆதா​ர​மாக இருக்​கிறது. ஆனாலும், அது இயற்கை வளங்​கள், உள் ​கட்​டமைப்​பு, வேலை ​வாய்ப்​பு​கள் மற்​றும் சுகா​தா​ரம், கல்வி போன்ற பொதுச் சேவைகள் மீது அழுத்​தத்தை ஏற்​படுத்​துகிறது.

குறிப்​பாக, வேக​மான மக்​கள் தொகை வளர்ச்சி என்​பது நகர்ப்​புற நெரிசல், அதி​கரித்து வரும் வேலை​யில்​லாத் திண்​டாட்​டம், சுற்றுச்சூழல் அழுத்​தம் மற்​றும் அத்​தி​யா​வசிய சேவை​களில் சுமையை ஏற்​படுத்​துகிறது. ஒரு கொள்கை கட்​டமைப்​பின் மூலம் இதை சரிசெய்​யா​விட்​டால், இந்த சவால்​கள் நாம் வளர்ந்த நாடாக மாறு​வதற்​கான பயணத்​தைத் தடுக்​கக்​கூடும்.

எனவே, நிலை​யான, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய மற்​றும் சீரான வளர்ச்​சியை உறுதி செய்​வதற்​காக கல்​வி, குடும்​பக் கட்​டுப்​பாடு சேவை​கள் மற்​றும் பிராந்​திய ரீதியி​லான உத்​தி​களின் அடிப்படையில் ஒரு தேசிய மக்​கள் தொகை மேலாண்​மைக் கொள்​கையை உரு​வாக்க வேண்​டும்.

பெண்கள் மேம்பாடு..: இத்​தகைய கொள்கை விழிப்​புணர்​வு, கல்வி மற்​றும் தன்​னார்வ பங்​களிப்​பின் அடிப்​படை​யில் இருக்க வேண்​டும். குடும்​பக் கட்​டுப்​பாடு சேவை​களுக்​கான உலகளா​விய அணுகலை உறுதி செய்​ய​வும், பெண்​கள் மேம்​பாட்டை ஊக்குவிக்க​வும் வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறியுள்​ளார்​.

<div class="paragraphs"><p>டெல்லி பாஜக எம்.பி.பிரவீன்</p></div>
கேரள தேர்தல் களத்தில் முந்தப் போவது யார்? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in