முஸ்லிம் பெண்களை பாதிக்கும் பல தார மணத்தை தடை செய்ய வேண்டும்: பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் வலியுறுத்தல்

முஸ்லிம் பெண்களை பாதிக்கும் பல தார மணத்தை தடை செய்ய வேண்டும்: பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: முஸ்​லிம் பெண்​களை பாதிக்​கும் பல தார மணத்தை தடை செய்ய வேண்​டும் என்று பார​திய முஸ்​லிம் மகிளா அந்​தோலன் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

குஜ​ராத்​தில் பார​திய முஸ்​லிம் மகிளா அந்​தோலன் (பிஎம்​எம்ஏ) என்ற அமைப்பு செயல்​படு​கிறது. இது முஸ்​லிம் பெண்​களுக்​காக குரல் கொடுத்து வரு​கிறது.

இதன் சார்​பில் 2,508 முஸ்​லிம் பெண்​களிடம் ஒரு கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இது தொடர்​பான ஆய்​வறிக்​கையை பிஎம்​எம்ஏ வெளி​யிட்​டுள்​ளது. இதில், "கணக்​கெடுப்​பில் இடம்​பெற்ற பெண்​களின் கணவர்​களில் 87% பேர் 2 மனை​வி​களை கொண்​டிருந்​தனர். 10% பேர் மூன்று மனை​வி​களை கொண்​டிருந்​தனர். 3% பேர் நான்கு அல்​லது அதற்கு மேற்​பட்ட மனை​வி​களை கொண்​டிருந்​தனர்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

மத சார்​பற்ற ஜனநாயகத்​துக்​கான இந்​திய முஸ்​லிம்​கள் (ஐஎம்​எஸ்​டி) அமைப்​பின் மூத்த செயற்​பாட்​டாளர்​கள் ஜாவேத் ஆனந்த், ஃபெரோஸ் மிதி​போர்​வாலா ஆகியோ​ரும் இந்த கணக்​கெடுப்​பில் பங்​கேற்​றனர்.

இது தொடர்​பாக பிஎம்​எம்ஏ இணை நிறு​வனர்​கள் ஜக்​கியா சோமன், நூர்​ஜஹான் இணைந்து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

முஸ்​லிம் குடும்​பச் சட்​டத்​தில் உடனடி சீர்​திருத்​தங்​களை செய்ய வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டுள்​ளது. எங்​கள் கணக்​கெடுப்பு முடிவு​கள், இந்​திய முஸ்​லிம்​கள் இடையே பல தார மணத்தை தடை செய்​வதற்​கான அவசரத் தேவையை காட்​டு​கிறது. இந்த நடை​முறை​யால் முஸ்​லிம் பெண்​களின் உடல்​நலம், உறவு​கள், கண்​ணி​யம் மற்​றும் உரிமை​கள் பாதிக்​கப்​படு​கின்றன.

பல தார திரு​மணங்​களில் முதல் மற்​றும் இரண்​டாவது மனை​விகள் 31 முதல் 50 வயது வரையி​லானவர்​கள். 59% பேர் இடைநிலை பள்​ளிக் கல்வி மட்​டுமே பெற்​றவர்​களாக உள்​ளனர். இத்​துடன் அவர்​களுக்கு கடுமை​யான நிதிப் பாது​காப்​பின்மை உள்​ளது.

முதல் மனை​வி​களில் 65% பேர் மாதம் ரூ.5 ஆயிரத்​துக்கு குறை​வாகவே சம்​பா​திக்​கின்​றனர். மற்​றவர்​களுக்கு வரு​மானம் இல்​லை. மேலும் இரண்​டாவது மனை​வி​களின் பொருளா​தார நிலைமை இன்​னும் மோச​மாக உள்​ளன.

திரு​மண​மான​தில் இருந்து முதல் மனை​வி​கள் பரி​தாப நிலை​யில் இருப்​பது தெரிய​வரு​கிறது. அவர்​களில் 84% பேருக்கு வரு​மானம் இல்​லை. முதல் மனை​வி​களில் 32% பேரிடம் வரதட்​சணை கேட்​கப்​பட்​டுள்​ளது. இதன் மதிப்பு ரூ.50,000 முதல் ரூ.20 லட்​சம் வரை உள்​ளது. இரண்​டாவது மனை​வி​களிடம் வரதட்​சணை மிக​வும் குறை​வாகவே கேட்​கப்​பட்​டுள்​ளது.

பல தார மணம் என்​பது முஸ்​லிம் சமூகத்​தின் சன்னி பிரி​வினரில் 20 சதவீதத்தை பாதிக்​கிறது, இந்த சன்னி முஸ்​லிம்​கள், இந்​தி​யா​வின் மொத்த இஸ்​லாமியர்​களில் 88 சதவீத​மாக உள்​ளனர். எனவே பல தார மணத்தை தடை செய்து மத்​திய அரசு சட்​டம் இயற்ற வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

முஸ்லிம் பெண்களை பாதிக்கும் பல தார மணத்தை தடை செய்ய வேண்டும்: பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் வலியுறுத்தல்
நந்தினி நிறுவனத்தின் பெயரில் கலப்பட நெய்: பெங்களூரு தம்பதி கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in