தெலங்கானாவில் போக்சோவில் சிக்கிய மகனை போலீஸில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருத்து
மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்சய் குமார் அருகில் அவர் மகன்

மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்சய் குமார் அருகில் அவர் மகன்

Updated on
1 min read

புதுடெல்லி: ​போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்கு தொடர்​பாக, தனது மகனை போலீ​ஸில் ஒப்​படைத்ததாக மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் தெரி​வித்​தார்.

பாஜக​வின் தெலங்​கானா மாநில முன்​னாள் தலை​வரும், தற்​போதைய மத்​திய உள்​துறை இணை அமைச்​சரு​மான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்​பாக எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது:

சத்​யமேவ ஜெயதே (வாய்​மையே வெல்​லும்). சட்​டம் மற்​றும் நீதித்​துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத் விசா​ரணைக்​காக எங்​கள் வழக்​கறிஞர்​கள் மூலம் தெலங்​கானா போலீ​ஸார் முன்னிலை​யில் இன்று ஆஜரா​னார்.

இதை நான் முன்​பும் கூறி​யுள்​ளேன்; அது என் சொந்த மகனாக இருந்​தா​லும் சரி, அல்​லது ஒரு சாதாரண குடிமக​னாக இருந்தாலும் சரி, சட்​டத்​தின் முன் அனை​வரும் சமம்​தான். தன் மீது எந்​தத் தவறும் இல்லை என்​ப​தில் எனது மகன் உறு​தி​யாக உள்ளார்.

சட்ட நிபுணர்​களு​டன் கலந்​தாலோ​சித்​து, எங்​களிடம் உள்ள ஆதா​ரங்​களை அவர்​களிடம் சமர்ப்​பித்த பிறகு, இந்த விவகாரத்தை சட்​டப்​பூர்வ நடை​முறை​களின் மூலம் தகுந்த முறையில் எதிர்​கொள்​ளலாம் என்று எங்​களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விசா​ரணைக்கு முழு​மை​யாக ஒத்​துழைப்​ப​தி​லும், நீதித்​துறையை மதிப்​ப​தி​லும் நான் நம்​பிக்கை கொண்​டுள்​ளேன். நீதி​மன்ற நடவடிக்​கைகள் தற்​பொழுது நிலு​வை​யில் உள்​ளதோடு, வரும் நாட்​களில் உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​படலாம் என்​றும் எதிர்பார்க்கப்​படு​கிறது.

எங்​கள் சட்​டக் குழு​வினர் அறி​வுரை வழங்​கிய போதி​லும், விசா​ரணைக்கு ஒத்​துழைப்​ப​தில் எங்​கள் தரப்​பில் எந்​தத் தயக்​க​மும் இருக்​கக் கூடாது என்று நான் கருதினேன். நீதித்​துறை மீது எனக்கு முழு நம்​பிக்கை உள்​ளது. நீதி வழங்​கப்​படு​வது தாமத​மாகலாம், ஆனால் ஒரு​போதும் மறுக்கப்படாது. இவ்​வாறு மத்​திய அமைச்​சர் சஞ்​சய் தெரிவித்துள்ளார்.

எனினும், இது சரணடைவு அல்ல என்று மறுத்​துள்ள சைப​ரா​பாத் போலீஸ் கமிஷனர் எம். ரமேஷ், ஹைத​ரா​பாத் நகரின் புறநகர்ப் பகு​தி​யில் பதுங்​கி​யிருந்த பகீரத் கைது செய்​யப்​பட்​ட​தாகத் தெரிவித்​தார்.

இது குறித்து அவர் கூறுகை​யில், ”பேத்​பஷீ​ரா​பாத் போக்சோ வழக்கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள பண்டி பகீரத், ஹைத​ரா​பாத் நகரின் புறநகர்ப் பகு​தி​யில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அடுத்த கட்ட சட்ட நடை​முறை​களுக்​காக அவர் காவல் நிலை​யத்​திற்கு அழைத்​துச் செல்​லப்​படு​கிறார். இது சரணடைவு அல்ல” என்​றார்.

ஆனால், தனது மகன் தாமாகவே போலீ​ஸார் முன்​னிலை​யில் ஆஜரான​தாகக் குறிப்​பிட்ட பண்டி சஞ்​சய், பகீரத் வி​சா​ரணைக்கு புறப்​படும் போது எடுக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படும்​ புகைப்​படம்​ ஒன்​றை​யும்​ பகிர்ந்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்சய் குமார் அருகில் அவர் மகன்</em></p></div>
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in