வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டோர் கடத்தப்பட்டால் போக்சோ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டோர் கடத்தப்பட்டால் போக்சோ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: வணி​க ரீ​தி​யாக பாலியல் சுரண்​டலுக்கு 18 வயதுக்குட்​பட்ட ஒரு​வர் கடத்​தப்​படும்​போது அதன் ​மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

பாலியல் தொழிலா​ளர்​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி ​வாலா, ஆர்​.ம​கா தேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிப​தி​கள் கூறிய​தாவது:

பய முறுத்​தல், பிற வகை​யான கட்​டாயப்​படுத்​துதல், ஆட்​ கடத்​தல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பாதிக்​கப்​படக்​கூடிய நிலை​யில் உள்ள ஒரு​வரின் நிலை​யைத் தவறாகப் பயன்​படுத்​துதல், ஒரு​வரின் சம்மதத்​தைப் பெறு​வதற்​காகப் பணம் அல்​லது சலுகைகளை வழங்​குதல்​, பெறு​தல் போன்ற பட்​டியலிடப்​பட்ட ‘வழி​முறை​களில்' ஏதேனும் ஒன்று பயன்​படுத்​தப்​பட்​டிருந்​தால், திட்​ட​மிடப்​பட்ட சுரண்​டலுக்கு ஒரு வயது வந்த பாதிக்​கப்​பட்​ட​வர் அளித்த சம்​மதம் பொருட்​படுத்​தத்​தக்​கதல்ல.

அதாவது, ஆட்​கடத்​தலுக்கு ஆளான ஒரு குழந்​தையோ அல்​லது பாதிக்​கப்​பட்​ட​வரின் சம்​மதத்​தையோ பொருட்​படுத்​தக்​கூ​டாது. வணிக ரீதி​யான பாலியல் சுரண்​டலுக்​காக குழந்​தைகளைக் கடத்தும் வழக்​கு​கள், பார​திய நியாய சன்​ஹிதா மற்​றும் ஒழுக்கக்கேடான கடத்​தல் தடுப்​புச் சட்​டம்' ஆகிய​வற்​றின் தொடர்புடைய பிரிவு​களு​டன் சேர்த்​து, கடுமை​யான போக்சோ சட்​டத்​தின் கீழும் வழக்​குப்​ப​திவு செய்ய முடி​யும்.

பாலியல் தொழிலா​ளர்​களின் கவலைகளைத் தணிக்​கும் வகை​யில், இந்த நீதி​மன்​றம் பல்​வேறு வழி​காட்​டு​தல்​களைப் பிறப்​பிக்​கிறது.

அதேவேளை​யில், குற்​றம் இழைத்​தவர்​கள் மீது வழக்​குத் தொடர்வதற்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மறு ​வாழ்வு அளிப்பதற்​கும் உரிய சட்​டக் கட்​டமைப்​பை​யும் தெளிவுபடுத்துகிறோம்.

பாலியல் தொழிலில் தாங்​கள் பணியமர்த்​தப்​படு​வ​தாக ஒரு​வருக்கு இருக்​கும் விழிப்​புணர்வு மட்டும், அவர்​கள் ஆட்​ கடத்​தலுக்கு ஆளான ஒரு பாதிக்கப்பட்டவர் என்ற நிலை​யி​லிருந்து அவர்​களை விலக்கிவிடாது. ஏனெனில், பணிச்​ சூழல்​கள் தொடர்​பாக அவர்கள் ஏமாற்​றப்​பட்​டிருக்​கக்​கூடும். அந்த பணி​யிடச் சூழல்களே பிற்​காலத்​தில் சுரண்​டல் நிறைந்​தவை​யாக அமைந்திருக்​கலாம்.

அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 23-வது ஷரத்​து, மனிதக் கடத்​தல், பிச்சை எடுத்​தல் மற்​றும் அது​போன்ற பிற அனைத்து வகை​யான கட்​டாய உழைப்பு முறை​களை​யும் தடை செய்​கிறது. மனிதக் கடத்​தல் எந்த வடி​வில் காணப்​பட்​டாலும், அந்த ஷரத்து அதனைத் தடை செய்​கிறது. எனவே, வணிக ரீ​தி​யான பாலியல் சுரண்டலுக்கு மேற்​கொள்​ளப்​படும் மனிதக் கடத்​தல் வழக்குகளை போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​ய​லாம். இவ்வாறு நீதிப​தி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டோர் கடத்தப்பட்டால் போக்சோ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in