மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

பிரதமர் நரேந்​திர மோடி

பிரதமர் நரேந்​திர மோடி

Updated on
1 min read

காட்வா: பாஜக ஆட்​சிக்கு வந்​தால் மேற்கு வங்கத்​தில் குடி​யுரிமைத் திருத்​தச் சட்​டம் (சிஏஏ) அமல்​படுத்​தப்படும் என்பதால் மாநிலத்​தில் உள்ள ஊடுரு​வல்​காரர்கள் மூட்டை முடிச்​சுகளைக் கட்​டிக் கொண்டு தயா​ராக இருங்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி பிரச்​சா​ரத்​தில் பேசி​னார்.

மேற்கு வங்க மாநிலத்​தில் உள்ள 294 தொகு​தி​களுக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. இதையொட்டி, பூர்வ பர்​த​மான் மாவட்​டத்​தில் உள்ள காட்​வா​வில் பாஜக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்​சார பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

மேற்கு வங்க மாநிலம் முழு​வதும் ஊழல் தலை​விரித்​தாடு​கிறது. மேற்கு வங்​கத்தை ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், அமைச்​சர்​கள் மற்​றும் சிண்​டிகேட்​கள் தொடர்​புடைய ஊழல்​கள் மீது நடவடிக்கை எடுப்​பதை உறுதி செய்ய, பாஜக ஒரு வெள்ளை அறிக்​கையை வெளி​யிடும். இது திரிண​மூல் அரசாங்​கத்​தின் 15 ஆண்டு கால முழு விவரத்​தை​யும் முன்​வைக்​கும். இத்​தகைய ஒவ்​வொரு குற்​றத்​தை​யும் தடுக்க பாஜக ஆட்​சி​யில் கடுமை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்.

எங்​கெல்​லாம் அதிக வாக்​குப்​ப​தி​வும், பெண்​களின் அதி​க​மான வாக்​கு​களும் பதி​வாகிறதோ, அங்​கெல்​லாம் பாஜக - தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு மிகப்​பெரிய மக்​களின் தெளி​வான ஆணை கிடைத்​துள்​ளது. கேரளா​வில், எல்​டிஎஃப் மற்​றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்​ட​ணி​களும் தாங்​கள் வெற்றி பெறு​வோம் என்று கூட உரிமை கோராத ஒரு சூழல் நில​வு​கிறது. மேற்கு வங்​கத்​தி​லும், பாஜக வெற்​றியை நோக்​கித் தொடர்ந்து முன்​னேறி வரு​கிறது. உங்​கள் உற்​சாக​மும், செயல்​பாடு​களுமே அந்த வெற்​றியை உறுதி செய்​கின்றன.

பாஜக​வுக்கு மேற்கு வங்​கத்​தில் பெருகி வரும் ஆதர​வைக் கண்​டு, திரிண​மூல் காங்​கிரஸ் பீதி அடைந்​துள்​ளது என்​பதே உண்​மை. இதனால்​தான் பொய்​களைக் கூறி மக்​களைத் திசை திருப்ப முயற்​சிக்​கிறது. திரிண​மூல் காங்​கிரஸின் ஊழல் கடையைப் பாஜக மூடி​விடும் என்​ப​தில் நீங்​கள் உறு​தி​யாக இருக்​கலாம்.

மேற்கு வங்​கத்​தில் விரை​வில் சிஏஏ அமல் செய்​யப்​படும். எனவே, இங்​கிருக்​கும் ஊடுரு​வல்​காரர்​கள் தங்​களது மூட்​டை, முடிச்​சுகளைக் கட்​டிக் கொண்டு தயா​ராக இருங்​கள். அவர்​கள் வெளி​யேற வேண்​டிய நேரம் வந்​து​விட்​டது.

மேற்கு வங்​கத்​தின் அனைத்து சகோ​தரி​களுக்​கும், மகள்​களுக்​கும் ஒரு உறு​தி​மொழியை அளிக்​கவே நான் இங்கு வந்​துள்​ளேன். பெண்​களுக்கு மாதம்​தோறும் ரூ.3,000 நிதி​யுதவி அளிக்​கப்​படும்.

பாஜக ஆட்​சிக்கு வந்​தால், தற்​போதைய நலத்​திட்​டங்​களை ரத்து செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக திரிண​மூல் காங்​கிரஸ் தவறான தகவல்​களைப் பரப்​பு​கிறது. ஆனால் உண்மை என்​னவென்​றால், பாஜக எந்​தத் திட்​டத்​தை​யும் நிறுத்​தாது. திரிண​மூலின் ஊழல் எனும் கடையை மட்​டுமே பாஜக மூடும். திரிண​மூல் காங்​கிரஸின் கொள்​ளையை மட்​டுமே பாஜக தடுத்து நிறுத்​தும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

<div class="paragraphs"><p>பிரதமர் நரேந்​திர மோடி</p></div>
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in