

பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனிதா, அமைச்சர் கொண்டபல்லி ஸ்ரீநிவாஸ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்
விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், போகாபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு விமான நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹெலிபேட் தளம் உள்ளிட்டவற்றை மாநில உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் அமைச்சர் கொண்டபல்லி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இவ்விழாவில் பிரதமருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.