

கோப்புப்படம்
புதுடெல்லி: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி, “பரீக் ஷா பே சர்ச்சா” (தேர்வு குறித்து விவாதம்) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
நடப்பு 2026-ம் ஆண்டுக்கான முன்பதிவு கடந்த டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 30-ம் தேதி நிலவரப்படி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என சுமார் 3 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
வரும் 11-ம் தேதி முன்பதிவு நிறைவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://innovateindia1.mygov.in/ இணையம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.