என்டிஏ எம்பிக்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி

என்டிஏ எம்பிக்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களுக்கு (எம்​பி) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது இல்​லத்​தில் இரவு விருந்து அளித்​தார்.

டெல்லியில் எண் 7, லோக் கல்​யாண் மார்க்​கில் உள்ள பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடை​பெற்ற தேர்​தலில் என்​டிஏ கூட்​டணி அமோக வெற்றி பெற்​றதைக் கொண்​டாடும் வித​மாக இந்த விருந்து நடை​பெற்​றது.

பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். 243 உறுப்​பினர்​களைக் காண்ட பிஹார் சட்​டப்​பேர​வை​யில் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை கைப்​பற்றி வெற்றி பெற்​றது.

என்டிஏ எம்பிக்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் சுற்றுப் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in