சிஏஏ மூலம் மதுவா நமாசுத்ரஸ் சமூகத்தினருக்கு குடியுரிமை: பிரதமர் மோடி உறுதி

மேற்குவங்கத்தின் அராம்பாக் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். படம்: பிடிஐ

மேற்குவங்கத்தின் அராம்பாக் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். படம்: பிடிஐ

Updated on
2 min read

கொல்கத்தா: சிஏஏ சட்​டத்​தின் மூலம் மதுவா நமாசுத்​ரஸ் சமூகத்​தினருக்கு குடி​யுரிமை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. வரும் 29-ம் தேதி இரண்​டாம் கட்ட தேர்​தல் நடை​பெற உள்​ளது. கடந்த சில நாட்​களாக பிரதமர் மோடி மேற்​கு​வங்​கத்​தில் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.

அங்கு பங்​கான் நகரில் நேற்று நடை​பெற்ற பாஜக பிரச்​சார கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் மண், பெண், மனித நே​யத்​துக்கு மதிப்பு அளிக்​கப்​பட​வில்​லை. கடந்த 15 ஆண்​டு​களாக மாநிலத்​தில் காட்​டாட்சி நடை​பெற்று வரு​கிறது. மாநிலம் முழு​வதும் ரவுடிகள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றனர்.

24 பர்​கானஸ் மற்​றும் ஹுக்ளிபகு​தி​கள் ஒரு காலத்​தில் தொழில்மையங்​களாக இருந்​தன. ஆனால் இரு பகு​தி​களி​லும் ஏராள​மான ஆலைகள் மூடப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக கடந்த 15 ஆண்​டு​களில் மேற்​கு​வங்​கத்​தின் தொழில் துறை முடங்​கி​யிருக்​கிறது. மாநில மக்​கள் வேலை தேடி இதர மாநிலங்​களுக்கு இடம்​பெயர்ந்து வரு​கின்​றனர்.

சந்​தேஷ்​காளி கொடூரத்​தில் பாதிக்​கப்​பட்ட பெண், கொல்​கத்தா ஆர்ஜி கர் மருத்​து​வ​மனை​யில் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட பெண் மருத்​து​வரின் தாய் ஆகியோர் பாஜக​வின் வேட்​பாளர்​களாக நிறுத்​தப்​பட்டு உள்​ளனர். பாஜகவை பொறுத்​தவரை பெண்​களுக்கு முன்​னுரிமை அளித்து வரு​கிறோம். பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​களை எதிர்த்து தீவிர​மாக போராடி வரு​கிறோம்.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது மேற்​கு​வங்​கத்​தில் தாமரை மலரும். மேற்​கு​வங்க இளைஞர்​கள் பன்​முகத் திறன் படைத்​தவர்​கள். ஆனால் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு மாநிலத்தை போதை​யின் பாதை​யில் அழைத்​துச் செல்​கிறது. இதனால் இளைஞர்​கள் வழிதவறி செல்​கின்​றனர்.

பாஜக ஆட்சி அமைக்​கும்​போது போதை பொருட்​களுக்கு எதி​ராக அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​படும். மாநில இளைஞர்​களின் திறன்​களுக்கு மதிப்பு அளிக்​கப்​படும். அறி​வு​சார்ந்த தொழில் துறை வளர்ச்​சிக்கு முன்​னுரிமை வழங்​கப்​படும். இதன்​மூலம் வேலை​வாய்ப்​பு​கள் பெரு​கும்.

முதல்​கட்ட தேர்​தலில் திரிண​மூல் அரசுக்கு எதி​ராக மக்​கள் கொதித்​தெழுந்து வாக்​களித்து உள்​ளனர். இதன் ​காரண​மாகவே வாக்​குப்​ப​திவு சதவீதம் கணிச​மாக அதி​கரித்து உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் வாழும் மதுவா நமாசுத்​ரஸ் சமூகத்​தினருக்கு சிஏஏ சட்​டத்​தின் மூலம் குடி​யுரிமை வழங்​கப்​படும். பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றால் இந்த வாக்​குறுதி கண்​டிப்​பாக நிறைவேற்​றப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

மதுவா நமாசுத்​ரஸ்? - மேற்​கு​வங்​கம் மற்​றும் அண்டை நாடான வங்​கதேசத்​தில் மதுவா நமாசுத்​ரஸ் மக்​கள் அதி​க​மாக உள்​ளனர். இந்த சமூகத்தை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் மேற்​கு​வங்​கத்​தில் வசிக்​கின்​றனர். இவர்​கள் மேற்​கு​வங்​கத்​தின் பூர்​வகுடி மக்​கள். கடந்த 1947-ம் ஆண்டு இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது கிழக்கு பாகிஸ்​தானில் இருந்து (வங்​கதேசம்) பெருந்​திரளான மதுவா நமாசுத்​ரஸ் மக்​கள் மேற்​கு​வங்​கத்​தில் குடியேறினர். கடந்த 1971-ம் ஆண்டு வங்​கதேச போரின்​போதும் இந்த சமூக மக்​கள் மேற்​கு​வங்​கத்​தில் தஞ்​சமடைந்​தனர். அவர்​களில் பெரும்​பாலானோருக்கு இன்​ன​மும் குடி​யுரிமை கிடைக்​க​வில்​லை.

பட்​டியலின பிரி​வில் உள்ள மதுவா நமாசுத்​ரஸ் சமூக மக்​கள், மேற்​கு​வங்​கத்​தின் 45 தொகு​தி​களின் வெற்​றி, தோல்​வியை முடிவு செய்​யும் சக்​தி​யாக உள்​ளனர். அண்டை நாட்​டில் இருந்து மேற்​கு​வங்​கத்​தில் குடியேறிய இந்த சமூக மக்​களுக்கு குடி​யுரிமை வழங்​கப்​படும் என்று பிரதமர்​ மோடி உறு​தி அளித்​திருப்​பது மிகுந்​த முக்​கி​யத்​து​வம்​ ​வாய்​ந்​த​தாகக்​ கருதப்​படுகிறது.

<div class="paragraphs"><p>மேற்குவங்கத்தின் அராம்பாக் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். படம்: பிடிஐ</p></div>
பொதுக்கூட்டத்தில் ஓவியம் அளித்த சிறுமிக்கு பிரதமர் மோடி கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in