கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

ஜஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல்.

ஜஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல்.

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் உள்ள சியாமா பிர​சாத் முகர்ஜி துறை​முகத்​தில் இன்று நடை​பெறவுள்ள விழா​வில், பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொள்​கிறார்.

அப்போது ஐஎன்​எஸ் துனகிரி, ஐஎன்​எஸ் அக்​ராய், ஐஎன்​எஸ் சன்​ஷோதக் ஆகிய 3 அதிநவீன போர்க் கப்​பல்​களை அவர் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்பட உள்​ளார்.

மத்​திய அரசின், ‘சுய​சார்பு இந்​தி​யா’ திட்​டத்​தின் கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்​கப்​பல் வடிவ​மைப்​புப் பணி​யகம் இக்​கப்​பல்​களை வடிவ​மைத்​துள்​ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினீயர்ஸ் இந்த 3 கப்​பல்​களை​யும் மிக நேர்த்​தி​யாகக் கட்டி முடித்​துள்​ளது.

ஒரே நேரத்​தில் வெவ்​வேறு திறன்​களைக் கொண்ட 3 முன்​னணிக் கப்​பல்​கள் கடற்​படை​யில் இணைக்​கப்​படு​வது இந்​திய வரலாற்​றில் ஒரு மிகப்​பெரிய சாதனை​ ஆகும்.

ஐஎன்​எஸ் துனகிரி போர்க் கப்​பலானது, எதிரி நாடு​களின் ரேடார்​களின் கண்​களில் படா​மல் கடலில் மறைந்து பயணிக்​கும்.

இதில் எதிரி​களின் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்​கும் பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் மற்​றும் நடுத்தர தூர வான் பாது​காப்பு ஏவு​கணை அமைப்​பு​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

ஐஎன்​எஸ் அக்​ராய் கப்​பலானது நீர்​மூழ்கி வேட்​டை​யாடி வகை​யைச் சேர்ந்​த​தாகும். இது அர்​னாலா கிளாஸ் எனப்​படும் ஆழமற்ற கடற்​பகு​தி​யில் பயணிக்​கும் நீர்​மூழ்​கி எதிர்ப்​புப் போர்க்​கப்​பல் ஆகும்.

ஐஎன்​எஸ் சன்​ஷோதக் கப்​பலானது, பெரிய ஆய்​வுக் கப்​பலாகும். இது கடலாய்​வுப் பணி​களுக்​காக வடிவ​மைக்​கப்​பட்ட 4-வது பெரிய சர்வே கப்​பல் என்று அழைக்​கப்​படு​கிறது. ஆழ்​கடல் மற்​றும் கடலோரப் பகு​தி​களில் உள்ள நிலப்​பரப்​பு​களைத் துல்​லிய​மாக வரைபடம் தயாரிக்க இந்​தக் கப்​பல் உதவும்.

<div class="paragraphs"><p>ஜஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல்.</p></div>
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொல்கத்தாவில் இன்று யோகா தின விழா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in