

விஜயவாடா: தமிழக சட்டப்பேரவை தேர்தல் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள செய்தியில், ”தமிழ்நாட்டில் விஜய் பெரும்பான்மையான மக்களின் மனதை வென்று, வெற்றிக் கனியை பறித்துள்ளார். கட்சியை தொடங்கிய சிறிது காலத்திலேயே மாபெரும் வெற்றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், கல்வி அமைச்சருமான லோகேஷ் தனது சமூக வலைதளப் பதிவில், ”விஜய் அரசியல் அரங்கேற்றமே அதிரடியாக உள்ளது. தமிழகத்தில் இளைய சமுதாய வாக்காளர்களின் ஒட்டுமொத்த வெற்றி இது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பொறுப்புகள், கடமைகளுடன் வெற்றி நடை போட தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ”பொது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள சகோதரர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.