சுரங்க அனுமதியை எளிதாக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை

சுரங்க அனுமதியை எளிதாக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
Updated on
1 min read

புதுடெல்லி: நிலக்​கரி, சுரங்​கங்​கள் மற்​றும் எஃகு தொடர்​பான நாடாளு​மன்ற நிலைக்​குழு அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

திறந்​தவெளி நிலக்​கரி சுரங்​கங்​களை போலவே நிலத்​தடி நிலக்​கரி சுரங்​கங்​களுக்​கும் அனு​மதி வழங்​கு​வது சிக்​கல் நிறைந்​த​தாக உள்​ளது. நிலத்​தடி நிலக்​கரிச் சுரங்​கம் நிலப் பயன்​பாட்டை குறைக்​கிறது. இதன் மூலம் காடு​கள் மற்​றும் உள்​கட்​டமைப்​பு​கள் பாது​காக்​கப்​படு​கின்றன.

நில சீரமைப்பு செல​வு​கள் மற்​றும் மறை​முக பசுமை இல்ல வாயு வெளி​யேற்​றத்தை குறைக்​கிறது. ஆழத்​தில் உள்ள தரமான நிலக்​கரியை அணுக முடிகிறது. வானிலை மாற்​றம் ஏற்​பட்​டாலும் ஆண்டு முழு​வதும் செயல்​படு​வதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் சுற்​றுச்​சூழல் தாக்​கம் குறை​வாக உள்​ளது.

இந்​நிலை​யில் நிலத்​தடி நிலக்​கரி சுரங்​கங்​களுக்​கான அனு​மதி நடை​முறை​கள் சிக்​கலான​தாக இருப்​ப​தால் திட்​டப் பணி​களில் தாமதம் ஏற்​படு​வ​தாக கூறப்​படு​கிறது. எனவே நிலத்​தடி நிலக்​கரி சுரங்​கங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வதற்​கான கொள்கை மற்​றும் விதி​முறை​களை எளிமைப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

சுரங்க அனுமதியை எளிதாக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
தோல்வியுடன் விடைபெற்றார் பிரபல WWE வீரர் ஜான் சீனா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in