உ.பி: எஸ்​ஐஆர் கூட்டத்தில் பங்கேற்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தற்கொலை

உ.பி: எஸ்​ஐஆர் கூட்டத்தில் பங்கேற்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தற்கொலை
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசம், தமிழ்​நாடு, புதுச்​சேரி உள்​ளிட்ட 11 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் பணியை வரும் டிசம்பர் 4ம் தேதிக்​குள் முடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், பணிச்​சுமை காரண​மாக எஸ்​ஐஆர் பணி​யில் ஈடுபட்டுள்ள அதி​காரி​கள் தற்​கொலை செய்து கொள்​ளும் சம்பவம் ஆங்​காங்கே நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், எஸ்​ஐஆர் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டிருந்த உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த அதி​காரி சுதிர் குமார் (25) நேற்று முன்​தினம் தனது இல்​லத்​தில் தூக்கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இதுகுறித்து சுதிர் குமாரின் சகோ​தரி காவல் நிலை​யத்​தில் அளித்துள்ள புகாரில், “எனது சகோ​தரருக்கு புதன்​கிழமை திருமணம் நடை​பெற இருந்​தது. இதனால், கடந்த ஞாயிற்​றுக்கிழமை நடைபெற்ற எஸ்​ஐஆர் தொடர்​பான ஆலோ​சனை கூட்​டத்​தில் அவர் பங்​கேற்​க​வில்​லை.

இதையடுத்​து, அவர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். இதனால் மன உளைச்​சலில் இருந்​தார். இந்​நிலை​யில், அவர் தற்​கொலை செய்து கொண்​டார். சம்​பந்​தப்​பட்ட உயர் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.

இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்​டத்​தில் வாக்​குச்​சாவடி நிலை அதிகாரியாக (பிஎல்ஓ) பணி​யாற்​றிய பெண், பணிச்​சுமை காரணமாக கடந்த சனிக்​கிழமை தற்​கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in