நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் உட்பட 6 பேர் ஒடிசா மாநிலத்தில் சுட்டுக்கொலை

நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் உட்பட 6 பேர் ஒடிசா மாநிலத்தில் சுட்டுக்கொலை
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் பாது​காப்பு படை​யினர் நடத்​திய என்​க​வுன்ட்​டரில் ரூ.1.10 கோடி சன்​மானம் அறிவிக்​கப்​பட்ட நக்​சலைட் முக்​கிய தலை​வர் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒடி​சா​வின் கந்​த​மால், கஞ்​சம் மாவட்​டங்​களை ஒட்​டிய ராம்பா வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​களை தேடும் பணி​யில் எல்​லைப் பாது​காப்​புப் படை (பிஎஸ்​எப்), மற்​றும் மத்​திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்​பிஎப்) வீரர்​கள் ஈடு​பட்​டிருந்​தனர். இந்​நிலை​யில் பாது​காப்பு படை​யினர் - நக்​சலைட்​கள் இடையே நேற்று காலை​யில் கடும் மோதல் ஏற்​பட்​டது. இந்த மோதலுக்​குப் பிறகு அங்​கிருந்து 2 பெண்​கள் உட்பட 6 நக்​சலைட்​களின் உடல்​களை பாது​காப்பு படை​யினர் மீட்​டனர்.

மேலும் பல்​வேறு வகை ஆயுதங்​களை கைப்​பற்​றினர். இந்​நிலை​யில் என்​க​வுன்ட்​டரில் இறந்​தவர்​களில் நக்​சலைட் அமைப்​பின் முக்​கி​யத் தலை​வர்​களில் ஒரு​வ​ரான கணேஷ் உய்கே (69) என அடை​யாளம் காணப்​பட்​டார். சிபிஐ (மாவோ​யிஸ்ட்) அமைப்​பின் உயர்​நிலை மத்​தி​யக் குழு உறுப்​பினரும், அதன் ஒடிசா செயல்​பாடு​களுக்​கான தலை​வரு​மாக உய்கே இருந்​தார்.

பக்கா ஹனு​மந்​து, ராஜேஷ் திவாரி, ரூபா போன்ற பல்​வேறு புனைப்​பெயர்​களால் அறியப்​பட்ட உய்​கே, தெலங்​கா​னா​வின் நல்​கொண்​டாவை சேர்ந்​தவர். மாவோ​யிஸ்ட் அமைப்​பில் இறுதி முடிவு எடுக்​கும் மத்​தி​யக் குழு​வில் எஞ்​சி​யிருந்த சில உறுப்​பினர்​களில் ஒரு​வ​ராக அவர் இருந்​தார். 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக தண்​ட​காரண்ய சிறப்பு மண்​டலக் குழு​வில் இவர் முக்​கியப் பங்கு வகித்​தார்.

மேலும், ‘சிவப்பு வழித்​தடம்’ என்று அழைக்​கப்​படும் பகுதி முழு​வ​தி​லும் உள்​ளூர் பிரிவு​களுக்​கும் மத்​திய தலை​மைக்​கும் இடையி​லான பால​மாக அவர் திகழ்ந்​தார். கிழக்​குத் தொடர்ச்சி மலைகளில் அந்த இயக்​கத்​தின் விரி​வாக்​கத்​துக்கு இவரே மூளை​யாக கருதப்​படு​கிறார். இவரைப் பற்​றிய தகவலுக்கு போலீ​ஸார் ரூ.1.10 கோடி சன்​மானம் அறி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் இவரது மரணம் நக்​சலைட் அமைப்பினருக்கு சமீபத்​திய ஆண்​டு​களில் ஏற்​பட்ட முக்​கிய பின்​னடைவு​களில் ஒன்​றாக கருதப்​படு​கிறது. மேலும் இந்​தி​யாவை 2026 மார்ச் மாதத்​திற்​குள் நக்​சலைட் இல்​லாத நாடாக மாற்ற வேண்​டும் என்ற இலக்கை நோக்​கிய மத்​திய அரசின் பயணத்​துக்கு வலு சேர்த்​துள்​ளது. இது பாது​காப்பு படைகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்​றியாக கருதப்​படு​கிறது.

நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் உட்பட 6 பேர் ஒடிசா மாநிலத்தில் சுட்டுக்கொலை
“சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணையிருப்பதில்தான்...” - தேவாலய தாக்குதல் சம்பவங்களில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in