

பெங்களூரு: பெங்களூரு எலஹங்காவை சேர்ந்த ஹேமந்த் குமார் வெளியிட்ட வீடியோவில், ‘‘இளைஞர் ஒருவர் சாலையில் 2 மணி நேரமாக ஒரே இடத்தில் அசையாமல் நிற்கிறார். அவர் ‘சோம்பி' போதைப் பொருளை பயன்படுத்தியதால் உறைந்து போய் இருக்கிறார்’’ என கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது.
பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் உத்தரவின்படி, ‘சோம்பி’ இளைஞரைப் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதில், அவர் மது அருந்தியதும் போதைப் பொருள் பயன்படுத்தாததும் தெரிய வந்தது. இதையடுத்து ஹேமந்த் குமாரை போலீஸார் கைது செய்தனர்.