பிஎல்ஓ.களுக்கு அழுத்தமில்லை: கேரள தேர்தல் அதிகாரி தகவல்

பிஎல்ஓ.களுக்கு அழுத்தமில்லை: கேரள தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள தலைமை தேர்​தல் அதி​காரி ரத்​தன் யு கேல்​கர் திரு​வனந்​த​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களுக்கு (பிஎல்ஓ) இலக்​கு​கள் தரு​வது அவர்​களுக்கு அழுத்​தம் தரவேண்​டும் என்ற நோக்​கத்​தில் அல்ல. மாறாக எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) பணி​களை உரிய காலத்​துக்​குள் முடிக்க வேண்​டும் என்​பதே ஆகும். பிஎல்​ஓ.க்​களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

கன்​னடம் மற்​றும் தமிழ் அதி​க​மாகப் பேசப்​படும் கர்​நாடகா மற்​றும் தமிழ்​நாடு எல்​லையை ஒட்​டிய பகு​தி​களில் பிஎல்​ஓ.க்​களு​டன் அம்​மொழிகளில் திறன் பெற்​றவர்​களும் செல்​கின்​றனர். கணக்​கெடுப்பு படிவங்​களில் இது​வரை 70 சதவீதம் நிரப்​பப்​பட்டு பெறப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

பிஎல்ஓ.களுக்கு அழுத்தமில்லை: கேரள தேர்தல் அதிகாரி தகவல்
SIR | வாக்காளர்கள் சமர்ப்பித்த எஸ்ஐஆர் படிவத்தின் நிலையை அறிவது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in