“புதிதாக பள்ளிகளை ஏன் உருவாக்கவில்லை?” - சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கேள்வி

‘புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம்...’
“புதிதாக பள்ளிகளை ஏன் உருவாக்கவில்லை?” - சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கேள்வி
Updated on
1 min read

மும்பை: கிராமங்களில் உள்ள அரசு பள்​ளி​களை மேம்​படுத்த வேண்​டும் என்ற நோக்​கத்​தில் வரும் ஆக.15-ம் தேதி நாடு தழு​விய பிரச்​சா​ரம் தொடங்​கப்​படும் என அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.

கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்​பின் நிறுவனர் அபிஜித் திப்கே சமூக வலை​தளத்​தில் ஒரு வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா சுதந்​திரம் அடைந்து 80 ஆண்​டு​கள் ஆகின்​றன. ஆனாலும் நாடு முழு​வதும் கிராமங்​களில் உள்ள அரசுப் பள்​ளி​கள் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. இன்​ன​மும் மாணவர்​கள் பள்​ளி​களுக்கு நீண்​டதூரம் நடந்து செல்​லும் நிலை உள்​ளது. மேலும் குடிநீர், கழிப்​பறை வசதி இல்​லை. இதனால் குறிப்​பாக பெண் குழந்​தைகள் மிக​வும் சிரமப்படு​கின்​றனர்.

நாம் புதிய நாடாளு​மன்​றத்​தை​யும், புதிய பிரதமரின் இல்லத்தையும் அமைத்​துள்​ளோம். ஏன் நம்​மால் கிராமங்​களில் புதிய பள்​ளி​களை உரு​வாக்க முடிய​வில்​லை? கிராமங்​களில் உள்ள விவ​சா​யிகள் மற்​றும் கூலித் தொழிலா​ளர்​களின் குழந்தைகளை நமது நாட்​டின் எதிர்​கால​மாக நாம் கருதவில்லையா? அந்​தக் குழந்​தைகளுக்​காக நாம் என்ன செய்துள்​ளோம், பெரிய நகரத்​தில் ஒரு குழந்​தைக்​குக் கிடைக்​கும் வசதி​களை அவர்​களால் பெற முடி​யாத நிலையை ஏன் மாற்ற முடிய​வில்​லை?

80-வது சுதந்​திர தின​மான வரும் 15-ம் தேதி, அரசு பள்​ளி​களை மேம்​படுத்த வலி​யுறுத்தி நாடு தழு​விய பிரச்​சா​ரம் தொடங்கப்படும். இந்த பிரச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி​யாக, மகாராஷ்டி​ரா​வின் மராத்​வாடா பகு​தி​யில் உள்ள எனது கிராமமான ஹிங்​கோலிக்​குச் சென்​று, அங்​குள்ள அரசுப் பள்ளிகளை மேம்​படுத்​து​மாறு கிராமத் தலை​வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.

கிராம தலை​வர்​களுக்கு...

இந்த காணொலியைக் காணும் அனைத்து கிராமத் தலைவர்களும், பெற்றோரும் தங்​கள் கிராமங்​களில் உள்ள அரசுப் பள்​ளி​களின் நிலையை மேம்​படுத்த உதவ வேண்​டும். பள்​ளி​கள் மேம்​படுத்​தப்​பட்ட பிறகு உள்ள நிலை குறித்த புகைப்​படம், வீடியோக்​களை எங்​களுக்கு அனுப்பி வையுங்​கள். அவை சிஜேபி-யின் சமூக ஊடகங்​களில் வெளி​யிடப்​படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“புதிதாக பள்ளிகளை ஏன் உருவாக்கவில்லை?” - சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கேள்வி
கருக்கலைப்பு: சட்டம் சொல்வது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in