யார் இந்த ‘ரெய்டு’ ஸ்ரீலேகா? - திருவனந்தபுரம் மேயர் ரேஸில் முந்துபவரின் பின்புலம்

கேரள உள்ளாட்சி தேர்தலில் என்டிஏ சாதனை
யார் இந்த ‘ரெய்டு’ ஸ்ரீலேகா? - திருவனந்தபுரம் மேயர் ரேஸில் முந்துபவரின் பின்புலம்
Updated on
2 min read

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தின் அடுத்த மேயர் யார் என்ற போட்​டி​யில் ஓய்வு பெற்ற போலீஸ் அதி​காரி ஸ்ரீலே​கா​வின் பெயர் முன்​னிலை​யில் இருக்​கிறார். யார் இவர்?

கேரள மாநிலத்​தில் நடை​பெற்ற உள்​ளாட்​சித் தேர்​தலில் ஆளும் மார்க்​சிஸ்ட் கட்​சிக்கு பெரும் பின்​னடைவு ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது. அதே​போல் பாஜக தலை​மையி​லான என்​டிஏ கூட்​ட​ணி​யும் கணிச​மான இடங்களைக் கைப்​பற்றி உள்​ளது.

குறிப்​பாக, திரு​வனந்​த​புரம் மாநக​ராட்​சி​யில் 101 வார்​டு​கள் உள்​ளன. இதில் 50 வார்​டு​களில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​கள் வெற்றி பெற்​றனர். மார்க்சிஸ்ட் கூட்​ட​ணிக்கு 29, காங்​கிரஸ் கூட்​ட​ணிக்கு 19 வார்டுகள் கிடைத்​தன. 2 வார்​டு​களில் சுயேச்​சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.

கடந்த 45 ஆண்​டு​களாக திரு​வனந்​த​புரம் மாநகராட்சி மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணி​யின் கோட்​டை​யாக இருந்​தது. முதல் ​முறை​யாக இந்த மாநக​ராட்​சியை பாஜக கைப்​பற்றி புதிய வரலாறு படைத்​திருக்கிறது.

இதையடுத்து திரு​வனந்​த​புரம் நகரத்​தின் முதல் பெண் என்ற அந்தஸ்​துக்​குரிய புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. இந்​தப் பதவிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதி​காரி ஸ்ரீலேகா நியமிக்கப்​படு​வார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

சாஸ்தாமங்கலம் வார்​டில் போட்​டி​யிட்ட ஆளும் மார்க்​சிஸ்ட் கட்சி வேட்பாளரை விட 700 வாக்​கு​கள் அதி​கம் பெற்று ஸ்ரீலேகா வெற்றி பெற்​றுள்​ளார். கடந்த 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ஸ்ரீலே​கா, கடந்த 2020-ல் ஓய்வு பெற்​றார்.

கடந்த 1960-ம் ஆண்டு டிசம்​பர் 25ம் தேதி பேராசிரியர் என்​.வேலாயுதன் நாயர் - பி.​ரா​தாம்மா தம்​ப​திக்கு பிறந்​தவர் ஸ்ரீலே​கா. காட்டன் ஹில்ஸ் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் படித்​தவர். பின்​னர் பெண்​கள் கல்​லூரி​யில் ஆங்​கில இலக்​கி​யத்​தில் முதுநிலை பட்​டம் பெற்​றார். பேராசிரிய​ராக பணி​யாற்றி வந்தவர், ரிசர்வ் வங்கி வேலை​யில் சேர்ந்​தார்.

அதிக சம்​பளம், சலுகைகள் கிடைத்​தா​லும், 1987-ம் ஆண்டு போலீஸ் துறை​யில் சேர்ந்​தார். கேரள மாநிலத்​தில் பெண் ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு முன்​னோடி​யாக திகழ்ந்​தார்.

சில ஆண்​டு​களில் போலீஸ் துறை​யில் ‘முன்​மா​திரி’ அதிகாரியானார். சிபிஐ-யில் சில காலம் பணி​யாற்றி போது, உடனுக்​குடன் அவர் எடுக்​கும் முடிவு​கள், சோதனை​களால் மிக​வும் பிரபல​மா​னார். அதற்​காக போலீஸ் துறை​யில், ‘ரெய்டு ஸ்ரீலே​கா’ என்றே அழைக்​கப்​பட்​டார். இவரது சேவையைப் பாராட்டி கேரள அரசு கடந்த 2007-ம் ஆண்டு விருதும் வழங்கி உள்​ளது.

கேரளா​வின் முதல் பெண் டிஜிபியா​னார். 33 ஆண்​டு​கள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்​றார். ‘மரண தூதன்’ உட்பட இவர் இதுவரை 9 புத்​தகங்​களை​யும் எழு​தி​யுள்​ளார். இவரது கணவர் டாக்டர் சேது​நாத். இவர்​களது மகன் கோகுல் எம்​பிஏ படித்​தவர்.

கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் பாஜக​வில் சேர்ந்து சமூக சேவை​களில் ஈடு​பட்​டார். அப்​போது, ‘‘பிரதமர் மோடி​யின் தலைமை மீது ஈர்க்​கப்​பட்​டு, பாஜக.வில் இணைந்​தேன்’’ என்று ஸ்ரீலேகா கூறி​னார்.

‘‘நான் பணி​யில் இருந்தவரை பாரபட்​சம் இல்லாமல் நடந்து கொண்டேன். அந்த வகை​யில் ஓய்வு பெற்ற பிறகு அரசி​யல் மூலம் மக்​களுக்கு சிறந்த சேவை செய்ய முடி​யும் என்று நம்​பு​கிறேன்’’ என்று கம்​பீரத்​துடன் கூறுகிறார் ஸ்ரீலே​கா.

யார் இந்த ‘ரெய்டு’ ஸ்ரீலேகா? - திருவனந்தபுரம் மேயர் ரேஸில் முந்துபவரின் பின்புலம்
Akhanda 2: Thaandavam விமர்சனம் - பாலையாவின் மாஸ் மசாலா திருப்தியா, விரக்தியா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in