பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு - தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா?

பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு - தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா?
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடியை தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்) கட்​சித் தலை​வர் சரத் பவார் மற்​றும் அவரது மகளும் மக்களவை உறுப்​பினரு​மான சுப்​ரியா சுலே ஆகிய இரு​வரும் நேற்று சந்​தித்​துப் பேசினர்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்​தது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் நாடாளு​மன்​றத்தை முடக்கி வரு​கின்​றனர். இந்​தப் பிரச்சினையில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யினரும் ஜந்தர் மந்​தரில் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இதே விவ​காரத்தை வலி​யுறுத்தி எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த சூழ்​நிலை​யில், தேசி​ய​வாத காங்​கிரஸ் (எஸ்​பி) கட்சி (என்​சிபி) தலை​வர் சரத் பவார் மற்​றும் அவரது மகளும் மக்​களவை உறுப்பினரு​மான சுப்​ரியா சுலே ஆகிய இரு​வரும் பிரதமர் மோடியை அவரது அலு​வல​கத்​தில் நேற்று சந்​தித்​துப் பேசினர்.

நடப்பு நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு உறுப்​பினர்​களின் ஆதரவைத் திரட்ட மத்​திய அரசு முயற்​சித்து வரு​கிறது. இந்த சூழலில் இந்த சந்​திப்பு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகக் கூறப்​படு​கிறது. என்​சிபிக்கு (எஸ்​பி) 8 எம்​.பி.க்​கள் உள்​ளனர் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்த சந்​திப்​பின்​போது, நாடு முழு​வதும் விவ​சா​யிகள் எதிர்கொள்ளும் பிரச்​சினை​கள் மற்​றும் நீர்ப்​பாசன பிரச்சினைகள் தொடர்​பான ஒரு மனுவை சரத் பவார் பிரதமர் மோடி​யிடம் சமர்ப்​பித்​தார். முன்​ன​தாக, தனது அலு​வல​கத்​துக்கு வந்த சரத் பவாரை, பிரதமர் மோடி நுழைவு வாயி​லில் சென்று வரவேற்​றார். இந்த சந்​திப்​பின்​போது இரு தலை​வர்​களும் சிரித்​த​படி உரை​யாடிய புகைப்​படங்​கள் வெளி​யாகி உள்​ளன.

அனைத்து மாநிலங்​களுக்​கும் 50% தொகுதி அதி​கரிக்​கப்​படும் என எழுத்​துப்​பூர்​வ​மாக உறுதி அளித்​தால் தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு ஆதரவு அளிக்​கப்​படும் என சுப்​ரியா சுலே சமீபத்தில் கூறி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. சரத் பவாரின் என்சிபி கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினரை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (என்டிஏ) இணைக்க அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. ஆனால், என்சிபியின் இரு பிரிவுகளும் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு - தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா?
“10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்தும் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை” - ராகுல் காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in