ரூ.500 கோடி கொடுத்தால் முதல்வர் பதவி: நவ்ஜோத் சிங் சித்து மனைவி விரக்தி

ரூ.500 கோடி கொடுத்தால் முதல்வர் பதவி: நவ்ஜோத் சிங் சித்து மனைவி விரக்தி
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாப் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் நவ்​ஜோத் சிங் சித்​து​வின் மனைவி நவ்​ஜோத் கவுர் சித்து நேற்று கூறிய​தாவது: நாங்​கள் எப்​போதும் பஞ்​சாப் மாநில நலன் மற்​றும் பஞ்​சாபிகளுக்​காகவே பேசுவோம். ஆனால், முதல்​வர் நாற்​காலி​யில் அமர்​வதற்கு ரூ.500 கோடி பணம் கொடுக்​கும் அளவுக்கு எங்​களிடம் வசதி இல்​லை. ஆனால், பஞ்​சாபை பொற்​கால மாநில​மாக மாற்​றும் வல்​லமை எங்​களிடம் உள்​ளது.

பஞ்​சாபில் காங்​கிரஸ் கட்​சி, நவ்​ஜோத் சிங் சித்​துவை முதல்​வர் வேட்​பாள​ராக அறி​வித்​தால் மட்​டுமே அவர் மீண்​டும் தீவிர அரசி​யலுக்கு திரும்​பு​வார்.

பஞ்​சாப் மாநில காங்​கிரஸ் கட்​சி​யைப் பொறுத்​தவரை​யில் உட்​கட்சி மோதல் உச்ச கட்​டத்தை அடைந்​துள்​ளது. ஏற்​கெனவே ஐந்து தலை​வர்​கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்​படு​கின்​றனர். அவர்​கள் சித்​துவை முன்​னுக்கு வரவிட மாட்​டார்​கள்.

பாஜக அவருக்கு பதவி வழங்​கி​னால் அக்​கட்​சி​யில் சேர்​வாரா என்​பது குறித்​தெல்​லாம் நான் கருத்து தெரிவிக்க முடி​யாது. இவ்​வாறு கவுர் தெரி​வித்​தார். பஞ்​சாபில் 2027-ல் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த நிலை​யில் சித்​து​வின் எதிர்​கால அரசி​யல் நகர்வு பரபரப்​பை கிளப்​பியுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in