

புதுடெல்லி: விமானப்படை துணைத் தளபதியாக இருந்த ஏர் மார்ஷல் நம்தேஸ்வர் திவாரி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தென்மேற்கு மண்டல தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் விமானப்படை துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் டெல்லியில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். விமானப்படையில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.