முனம்பம் வக்பு நிலப் பிரச்சினை: போராட்டம் இன்று நிறைவு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

கொச்சி: கேரள மாநிலம் கொச்சி மாவட்​டம் முனம்​பம் பகு​தி​யில் உள்ள 404 ஏக்​கர் நிலத்தை வக்பு வாரி​யம் சொந்​தம் கொண்​டாடி வரு​கிறது. இந்த நிலத்​தில் 600 குடும்​பங்​கள் வசித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில் இந்​தக் குடும்​பங்​களிட​மிருந்து சொத்து வரியை வசூலிக்​காமல் அரசு அதி​காரி​கள் நிறுத்தி வைத்​தனர். அது பிரச்​சினைக்​குரிய நிலம் என்​ப​தால் வரியை வசூலிக்​க​வில்லை என்று அவர்​கள் தெரி​வித்து வந்​தனர். இதனால் அந்​தப் பகு​தி​யில் வசித்து வந்​தவர்​கள் முனம்​பம் நில பாது​காப்​புக் கவுன்​சில் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்​படுத்தி தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்தி வந்​தனர். மேலும், நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தொடர்ந்​தனர்.

இந்​நிலை​யில் அந்த குடும்​பங்​களிட​மிருந்து நில​வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்​கவேண்​டும் என்று கேரள மாநில அரசுக்கு கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதையடுத்து இன்று போராட்​டத்தை நிறுத்​தப் போவ​தாக போ​ராட்​டக்​குழு உறுப்​பினர் ஜோசப் ராக்கி அறி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சத்தீஸ்கரில் டிஜிபி, ஐஜி.க்கள் மாநாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in