மே.வங்கத்தில் காட்டாட்சி அகற்றப்படும்: அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி உறுதி

மே.வங்கத்தில் காட்டாட்சி அகற்றப்படும்: அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி உறுதி
Updated on
2 min read

கொல்கத்தா: மேற்​கு​ வங்​கத்​தில் மெகா காட்​டாட்சி அகற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​ வங்​கத்​தின் நாடியா மாவட்​டம், தேஹர்​பூரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க பிரதமர் நரேந்​திர மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து மேற்​கு ​வங்க தலைநகர் கொல்​கத்​தாவுக்கு சிறப்பு விமானத்​தில் சென்​றார்.

அங்​கிருந்து தேஹர்​பூருக்கு ஹெலி​காப்​டரில் சென்​றார். ஆனால் மோச​மான வானிலை காரண​மாக ஹெலி​காப்​டர் தரை​யிறங்க முடிய​வில்​லை. இதைத் தொடர்ந்து கொல்​கத்தா விமான நிலை​யத்​துக்கு திரும்​பிய பிரதமர் நரேந்​திர மோடி அங்​கிருந்து காணொலி வாயி​லாக தேஹர்​பூர் அரசு நலத்​திட்ட விழா​வில் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வளர்ச்​சிக்கு ஆதர​வாக​வும் காட்​டாட்​சிக்கு எதி​ராக​வும் மக்​கள் வாக்​களித்​தனர். பிஹார் தேர்​தல் வெற்றி மூலம் மேற்​கு​ வங்​கத்​தில் பாஜக​வுக்​கான வெற்றி வாசல் திறந்​திருக்​கிறது.

கடந்த 30 ஆண்​டு​களாக இடது​சாரி முன்​னணி, திரிபு​ரா​வின் வளர்ச்​சியை தடுத்​தது. தற்​போது பாஜக ஆட்​சி​யில் அந்த மாநிலம் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. பொருளா​தா​ர ரீ​தி​யாக மேற்​கு ​வங்​கத்​தை​விட திரிபுரா வேக​மாக வளர்​கிறது.

திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் மேற்​கு​ வங்​கத்​தின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி உள்​ளது. ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாய் மதிப்​புள்ள வளர்ச்​சித் திட்​டங்​கள் நிறைவேற்​றப்​ப​டா​மல் உள்​ளன. திரிண​மூல் காங்​கிரஸ் என்​னை​யும், பாஜகவை​யும் எதிர்க்க விரும்​பி​னால் முழு பலத்​துடன் எதிர்க்​கலாம். ஆனால் மேற்​கு​வங்​கத்​தின் வளர்ச்​சியை ஏன் தடுக்க வேண்​டும்?

தற்​போது மேற்​கு​ வங்​கத்தை ஊடுரு​வல்​காரர்​கள் ஆக்​கிரமித்து வரு​கின்​றனர். அவர்​களுக்கு ஆதர​வாக ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு செயல்​படு​கிறது. ஊடுரு​வல்​காரர்​களை வெளி​யேற்ற ஒவ்​வொரு தெருக்​களி​லும் விழிப்​புணர்வு பதாகைகளை நிறுவ வேண்​டும்.

மேற்​கு​வங்​க​மும், வங்க மொழி​யும் நாட்​டின் கலாச்​சா​ரத்தை செழு​மைப்​படுத்தி வரு​கின்​றன. உதா​ரண​மாக வங்க மொழி​யில் எழுதப்​பட்ட வந்தே மாதரம் பாடலை குறிப்​பிடலாம். இந்த பாடலின் 150-வது ஆண்டு தினம் நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

மேற்​கு​ வங்​கத்​தில் மெகா காட்​டாட்சி நடை​பெறுகிறது. இந்த காட்​டாட்​சியை அகற்​று​வோம். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மேற்​கு​ வங்​கத்​தில் இரட்டை இன்​ஜின் அரசு பதவி​யேற்க மக்​கள் வாய்ப்பு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மேற்​கு ​வங்​கத்​தின் நாடியா மாவட்​டத்​தில் பரஜகுலி - கிருஷ்ணாநகர் தேசிய நெடுஞ்​சாலை​யில் 66.7 கிமீ தொலை​வுக்கு 4 வழிச்​சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது. வடக்கு 24 பர்​கானா மாவட்​டத்​தில் பாராசத் – பரஜகுலி தேசிய நெடுஞ்​சாலை​யில் 17.6 கிமீ தொலை​வுக்கு 4 வழிச்​சாலை அமைக்​கப்பட உள்​ளது. இரு திட்​டங்​களின் மதிப்பு ரூ.3,200 கோடி ஆகும். தேஹர்​பூர் அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி நேரில் பங்​கேற்க முடி​யாத நிலை​யில் ஆளுநர் ஆனந்த போஸ் இந்த திட்​டங்​களை தொடங்​கி​ வைத்​தார்.

அசாமில் புதிய முனை​யம் திறப்பு: அசாமின் குவாஹாட்​டி​யில் லோகபிரியா கோபி​நாத் பர்​தோலோய் சர்​வ​தேச விமான நிலை​யம் செயல்​படு​கிறது. அங்கு ரூ.4,000 கோடி செல​வில் புதிய முனை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது.

கொல்​கத்​தா​வில் இருந்து நேற்று பிற்​பகல் குவாஹாட்டி சென்ற பிரதமர் நரேந்​திர மோடி விமான நிலை​யத்​தின் புதிய முனை​யத்தை திறந்​து​ வைத்தார். அங்கு நடை​பெற்ற விழா​வில் அவர் பேசி​ய​தாவது:

இரட்டை இன்​ஜின் அரசால் அசாம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. முந்​தைய காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அசா​மும் வடகிழக்கு மாநிலங்​களும் புறக்​கணிக்​கப்​பட்​டன. மத்​தி​யில் பாஜக அரசு பதவி​யேற்ற பிறகு வடகிழக்கு மாநிலங்​களின் வளர்ச்​சிக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படு​கிறது. ஒரு காலத்​தில் அசாமில் அரசு வேலை பெற லஞ்​சம் கொடுக்க வேண்​டி இருந்​தது. இப்​போது ஊழல், லஞ்​சம் முழு​மை​யாக ஒழிக்​கப்​பட்டு உள்​ளது.

குவாஹாட்டி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் புதிய முனை​யம் திறக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் சுற்​றுலாப் பயணி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும். இந்த புதிய முனை​யம் அதிநவீன தொழில்​நுட்​பத்​தால் மூங்​கில்​களால் கட்​டப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் அழகும் வலிமை​யும் ஒரு​மித்து சங்​கமித்து உள்​ளன. கிழக்கு இந்​தி​யா​வின் நுழைவு​ வாயி​லாக அசாம் உரு​வெடுத்​திருக்​கிறது. வடகிழக்கு முழு​வதும் 5ஜி சேவை விரிவுபடுத்​தப்​பட்டு இருக்​கிறது. குவாஹாட்​டி-ஜல்​பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

அசாமில் ரூ.10,600 கோடி செல​வில் அமோனி​யா- யூரியா தொழிற்​சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்​கல்​ நாட்​டு​கிறார். மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மே.வங்கத்தில் காட்டாட்சி அகற்றப்படும்: அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி உறுதி
ஹிஜாபை விலக்கிய நிதிஷ்: அரசு பணியில் சேராத பெண் மருத்துவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in