“இண்டியா கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்க வேண்டும்” - மன்மோகன் முன்னாள் ஆலோசகர் கருத்து

“இண்டியா கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்க வேண்டும்” - மன்மோகன் முன்னாள் ஆலோசகர் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: முன்​னாள் பிரதமர் மன்​மோகன் சிங்​கின் ஊடக ஆலோ​சகர் சஞ்​சய் பாரு எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யுள்​ள​தாவது: தற்​போது ஒரு அரசி​யல் கட்​சி​யை​யும், மாநில அரசை​யும் ஒருசேர வழிநடத்​தும் ஒரே பெண் தலை​வர் மம்தா பானர்ஜி மட்​டுமே. அவர் முற்​றி​லும் சுயம்​பு​வாக உயர்ந்த முதலாம் தலை​முறைத் தலை​வர்.

கடந்த காலங்​களில் சோனியா காந்தி - மன்​மோகன் சிங் இடையே​யான அரசி​யல் கூட்​டணி வெற்​றிகர​மாக இருந்​தது. ஆனால், தற்​போது ராகுல் காந்தி - மல்​லி​கார்​ஜுன கார்கே கூட்​டணி, வலிமை​ வாய்ந்த தலை​வ​ரான நரேந்​திர மோடி தலை​மையி​லான பாஜகவை வீழ்த்த எந்​த வகை​யிலும் உதவ​வில்லை.

இந்நிலை​யில், மம்தா எதிர்க்​கட்சி கூட்​ட​ணிக்​குத் தலை​மையேற்​றால், அது பாஜக​வின் பெண்​கள் வாக்கு வங்​கி​யில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும். இந்​திரா காந்​திக்​குப் பிறகு ஒரு பெண் பிரதமர் தலை​மையேற்​ப​தற்​கான காலம் இது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இந்​தக் கட்​டுரையை சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்ள திரிண​மூல்​ ​காங்​கிரஸ்​ எம்​பி சகரி​கா கோஷ், “இது ​காலத்​தின்​ கட்​​டா​யம்​” என பதி​விட்​டுள்​​ளார்​.

“இண்டியா கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்க வேண்டும்” - மன்மோகன் முன்னாள் ஆலோசகர் கருத்து
10-ம் வகுப்பு தேர்வை தவிர்த்துவிட்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in