முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்தவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்தவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
Updated on
1 min read

புலந்த்சாஹர்: பிறந்த நாள் கொண்​டாட்​டத்​தின்போது முகத்​தில் கேக் பூசி​ய​தால் ஏற்​பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்​தவர் போலீஸ் என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொலை செய்​யப்​பட்​டார்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்​சாஹர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் கடந்த சனிக்​கிழமை இரவு ஜீத்து சைனி என்​பவரின் பிறந்த நாள் கொண்​டாட்​டம் நடை​பெற்​றது. அப்​போது ஜீத்து சைனி என்பவரின் முகத்​தில் அவரது நண்​பர்​கள் சிலர் கேக் பூசியதாகக் கூறப்​படு​கிறது. அப்​போது இரு தரப்​பினர் இடையேகடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. பின்​னர் ஒரு​வர் துப்பாக்​கி​யால் சுட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதில் 3 இளைஞர்​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதையடுத்து ஜீத்து சைனி உள்​ளிட்​டோர் தப்​பியோடினர். தப்பி ஓடிய குற்​ற​வாளி​களைக் கைது செய்ய 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. ஜீத்து சைனி குறித்து தகவல் கொடுப்​போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி வழங்​கப்​படும் என்​றும் போலீ​ஸார் அறிவித்​திருந்​தனர். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு, புலந்த்​சாஹர் அருகே தராவு பகு​தி​யில் போலீ​ஸார் வாக​னச் சோதனையில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அந்த வழியே 2 பேர் ஸ்கூட்​டரில் வந்​தனர். அவர்​களை நிறுத்​து​மாறு போலீ​ஸார் கூறியபோது அவர்​கள் வாக​னத்தை திருப்பி தப்​பியோட முயன்​றனர். அவர்​களை துரத்​திச் சென்ற போலீ​ஸார் ஜஜ்ஜார் சாலைப் பகு​தி​யில் அவர்​களை மடக்​கினர். அப்​போது ஸ்கூட்​டரில் வந்த நபர்​கள் போலீ​ஸாரை நோக்கி துப்​பாக்​கி​யால் சுட்​டனர். பதி​லுக்கு போலீ​ஸாரும் துப்​பாக்​கி​யால் சுட்டனர். இந்த துப்​பாக்​கிச் சண்டை சில நிமிடங்​களுக்கு நீடித்தது. இதில் ஒரு​வர் துப்​பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்​தார். மற்​றொரு​வர் தப்​பியோடி​விட்​டார்.

இதையடுத்து கீழே கிடந்த இளைஞரை மருத்​து​வ​மனைக்கு போலீஸார் தூக்​கிச் சென்​றனர். ஆனால் அவர் ஏற்​கெனவே உயிரிழந்​து​விட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். விசா​ரணை​யில் அவர் ஜீத்து சைனி என்​பது தெரிய வந்​தது. இதையடுத்து சம்பவ இடத்​தில் பிஸ்​டல், துப்​பாக்கி குண்​டு​கள், நம்​பர் பிளேட் இல்​லாத ஸ்கூட்​டர் ஆகிய​வற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். இந்த வழக்​கில் ஏற்​கெனவே 6 பேரை போலீஸார்​ கைது செய்​துள்​ளனர்​.

முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்தவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
தாக்குதல் நடத்தினால் பதிலடி: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in