ஹரித்வாரில் 105 படித்துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை: உத்தராகண்ட் அரசு பரிசீலனை

ஹரித்வாரில் 105 படித்துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை: உத்தராகண்ட் அரசு பரிசீலனை
Updated on
1 min read

டேராடூன்: கும்​பமேளா நாட்​களில் ஹரித்​வாரில் கங்கை நதி​யின் 105 படித்​துறை​களில் இந்​துக்​கள் அல்​லாதோருக்கு தடை விதிப்​பது குறித்து உத்​த​ராகண்ட் அரசு பரிசீலித்து வரு​கிறது.

ஹரித்​து​வாரின் முக்​கிய ஹர்​-கி-​பாரி படித்​துறை பராமரிப்பை கண்​காணித்து வரும் கங்கா சபை மற்​றும் சில துறவி​களின் கோரிக்​கையை தொடர்ந்து அதனை உத்​தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. இந்​நிலை​யில் கும்​பமேளா நாட்​களில் 105 படித்​துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபை​யின் கோரிக்கைக்கு ஹரித்​வாரில் வசிக்​கும் பலர் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

இவ்​வாறு தடை செய்​வது சாத்​தி​ய​மும் அல்ல, விரும்​பத்​தக்​கதும் அல்ல என்று வழக்​கறிஞர் சுதான்ஷு திவேதி கூறி​னார். நீர்மின்துறை​யின் முன்​னாள் நிர்​வாகப் பொறி​யாளர் ராகேஷ் சந்திரா கூறுகை​யில், “நமது மதத்​தின் தா​ராள​வாத பிம்​பத்தை இந்​தப் பாகு​பாடு கடுமை​யாக பா​திக்​கும்​” என்​றார்​. இது தவிர, ரிஷி கேஷ், ஹரித்​வார் ஆகிய நகரங்​களை ‘சனா தன புனித நகரங்​கள்’ என்று அறிவிக்​க​வும் மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

ஹரித்வாரில் 105 படித்துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை: உத்தராகண்ட் அரசு பரிசீலனை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in