கேரளாவில் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆசிரியர் பணி நீக்கம்

கேரளாவில் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆசிரியர் பணி நீக்கம்
Updated on
1 min read

கன்னூர்: கேரள மாநிலம் கன்​னூர் மாவட்​டம் கடயத்​தூரைச் சேர்ந்த பத்​ம​ராஜன் (48) அரசு பள்ளி ஆசிரிய​ராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு 4-ம் வகுப்பு மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக இவர் மீது புகார் எழுந்​தது. இது தொடர்​பாக போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கை விசாரித்த தலசேரி விரைவு சிறப்பு நீதி​மன்​றம், பத்​ம​ராஜனுக்கு ஆயுள் தண்​டனை விதித்தது.இந்​நிலை​யில், பத்மராஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்​சர் வி.சிவன் குட்டி நேற்று தெரிவித்தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in