மகனை ஐஎஸ் அமைப்பில் சேர வலியுறுத்திய தாய், வளர்ப்பு தந்தை மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு

மகனை ஐஎஸ் அமைப்பில் சேர வலியுறுத்திய தாய், வளர்ப்பு தந்தை மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்​தனம்​திட்​டாவைச் சேர்ந்த ஒரு பெண் இஸ்​லாம் மதத்​துக்கு மாறி, வெம்​ப​யம் கிராமத்​தைச் சேர்ந்த ஒரு​வரை மறுமணம் செய்​துள்​ளார்.

பின்​னர் இரு​வரும் இங்​கிலாந்​துக்கு சென்று வசித்து வந்​துள்​ளனர். இந்​நிலை​யில், அந்​தப் பெண்​ணின் முதல் கணவரின் மகன் (16) இங்​கிலாந்​தில் உள்ள தாய் வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அவனிடம், ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்பு தொடர்​பான சில வீடியோ காட்​சிகளைக் காட்டி அதில் சேர வலி​யுறுத்தி உள்​ளனர்.

பின்​னர் கேரளா திரும்​பியதும், மகனை ஆட்​டிங்​கல் நகரில் உள்ள மத ரீதியி​லான கல்வி நிறு​வனத்​தில் சேர்த்​துள்​ளனர். அங்கு அவனுடைய நடவடிக்​கை​யில் சில மாற்​றங்​கள் இருப்​பதை உணர்ந்த ஆசிரியர்​கள், அவனுடைய தாய் மற்​றும் உறவினர்​களுக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். இதையடுத்​து, உறவினர்​கள் இதுகுறித்து போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர்.

இதன் அடிப்​படை​யில், வெஞ்​சா​ரமூடு காவல் நிலை​யத்​தில் வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்​பில் அந்த இளைஞரை சேர்த்​து​விட அவனது தாயும், வளர்ப்பு தந்​தை​யும் வலி​யுறுத்​தி​யது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்​து, போலீஸார் அவர்​கள் மீது சட்​ட​விரோத செயல்​கள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்குப் பதிவு செய்​து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in