போலீஸ் அதிகாரி உட்பட 12 பேரை திருமணம் செய்த பெண் கைது: ரூ.8 கோடியை சுருட்டினார்

போலீஸ் அதிகாரி உட்பட 12 பேரை திருமணம் செய்த பெண் கைது: ரூ.8 கோடியை சுருட்டினார்
Updated on
1 min read

கான்பூர்: ​​போலீஸ் அதி​காரி உட்பட 12 பேரை ஏமாற்றி ரூ.8 கோடி மோசடி செய்து திரு​மணம் செய்த பெண்ணை உ.பி மாநில போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

உத்​தரபிரதேச மாநிலம் கான்​பூரைச் சேர்ந்​தவர் திவ்​யான்ஷி சவுத்​ரி (30), பி.எட் படித்​து​விட்டு சிடெட் தேர்​வெழுத தயா​ராகி வரு​வ​தாக திருமண தரகர்​களிடம் கூறி வந்​துள்​ளார். படித்த, குடும்​பப் பாங்​காக உள்ள இவரைப் பார்த்த ஆண்​கள் திரு​மணத்​துக்கு தயார் என்று கூறி​யுள்​ளனர்.

முதலில் ஆண் ஒரு​வரைத் தொடர்​பு​கொண்டு அவரது நம்​பிக்​கை​யைப் பெற்ற பின்​னர் அவருடன் நெருக்​க​மாக பழகு​வார் திவ்​யான்​ஷி. அதற்​கடுத்த சில நாட்​களில் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்ய வந்​தார் என்று அவரை மிரட்​டு​வார். மேலும் போலீஸ் நிலை​யத்​தில் பொய் புகார் கொடுத்து மிரட்​டு​வார். இதனால் பயந்​து​போன ஆண்​கள் பணம் கொடுத்து தப்​பித்​து​விடு​வர். இது​போன்று பல ஆண்​களிடம் திவ்​யான்ஷி கைவரிசையைக் காட்​டி​யுள்​ளார்.

மேலும் 3 பேரை மணந்து அவர்​களை மிரட்டி பல கோடி ரூ​பாயை இவர் சுருட்​டிக் உள்​ளார். அண்​மை​யில் கான்​பூரைச் சேர்ந்த ஆதித்ய குமார் லோதவ் என்ற போலீஸ் சப்​-இன்​ஸ்​பெக்​டரை 4-வது நபராக மணந்​தார் திவ்​யான்​ஷி. அப்​போது திவ்​யான்​ஷி​யின் போக்​கில் சந்​தேகம் கொண்ட ஆதித்​யகு​மார், திவ்​யான்ஷி குறித்து விசா​ரித்​த​போது அவர் பலரை ஏமாற்​றியது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை கான்​பூர் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீஸ் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “திவ்​யான்ஷி இது​வரை 4 பேரை திரு​மணம் செய்து ஏமாற்​றி​யுள்​ளார். இதில் 2 பேர் வங்கி மேலா​ளர்​கள். அவர்​கள் மீது முதலில் பாலியல் வன்​கொடுமை வழக்​கைப் பதிவு செய்​யும் திவ்​யான்ஷி பின்​னர், போலீஸ் நிலை​யத்​துக்கு வெளியே பணத்தை செட்​டில் செய்​து​கொண்டு வழக்கை முடித்​துக் கொள்​வார். இதே​போல் எஸ்​.ஐ. ஆதித்​யகு​மார் உட்பட 2 அரசு அதி​காரி​களை​யும் இவர் திருமணம் செய்​தார். சுமார் ரூ.8 கோடி வரை இவர் மோசடி செய்​துள்​ளார்.

இவருக்கு பல அலு​வல​கங்​களில் அதி​காரி​கள், ஊழியர்​களு​டன் பழக்​கம் உள்​ளது. பலரின் உதவி​யுடன் இந்த பாலியல் வன்​கொடுமை பொய் புகார்​கள் உள்​ளிட்ட சம்​பவங்​களை அரங்​கேற்றி வந்​தார். அவரது செல்​போனில் உள்ள யுபிஐ ஐ.டி.யை சோதனை செய்து பார்த்​த​தில் கோடிக்​கணக்​கான பணம் இவரது வங்​கிக் கணக்​கு​களுக்​கு வந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in