ஐஎஸ்ஐ-க்கு இந்திய சிம் கார்டுகள்: டெல்லியில் இளம் தம்பதி கைது

ஐஎஸ்ஐ-க்கு இந்திய சிம் கார்டுகள்: டெல்லியில் இளம் தம்பதி கைது
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு இந்திய சிம் கார்டுகளை வாங்கி அனுப்​பியது தொடர்​பாக டெல்லியைச் சேர்ந்த இளம் தம்​ப​தியை காவல் துறை சிறப்​புப் பிரிவு நேற்று கைது செய்​தது.

இது குறித்து டெல்லி காவல்​துறை சிறப்​புப் பிரி​வின் துணை ஆணை​யர் நர்ரா சைதன்யா கூறிய​தாவது: தெற்கு தில்​லி​யின் சாராய் காலே கான் பகு​தி​யைச் சேர்ந்த முகமது சாஹில் (25), அவரது மனைவி சமீரா (21) இளம் தம்​பதி பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்த குற்​றச்​சாட்​டில் கைது செய்​யப்ப்​பட்​டுள்​ளனர். அவர்களிடமிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட 2 கைபேசிகளில் பாகிஸ்​தான் உளவு அதி​காரி​களு​டன் நடத்​திய உரையாடல்களுக்கான முக்​கிய ஆதா​ரங்​கள் சிக்​கி​யுள்​ளன.

இந்​தி​யப் பாது​காப்பு மற்​றும் ராணுவம் தொடர்​பான ரகசி​யத் தகவல்​களைச் சேகரிப்​ப​தற்​காக, இந்​தி​யச் சிம் கார்​டு​களைப் பெற்று துபாய் வழி​யாகப் பாகிஸ்​தானுக்கு இந்​தத் தம்​பதி அனுப்பி வைத்​துள்​ளனர். இந்த இந்​திய எண்​களைக் கொண்டு பாகிஸ்​தானில் இருந்​த படியே வாட்​ஸ்​அப் கணக்​கு​களைத் தொடங்​கி, இந்​திய வாட்​ஸ்​அப் குழுக்​களில் இணைந்து பாகிஸ்தான் உளவு அமைப்​பினர் தகவல்​களைச் சேகரித்து வந்​துள்​ளனர்.

இந்​திய ராணுவப் படை முகாம்​களை நோட்​ட​மிடு​வது, ஒழுங்கு நடவடிக்கை எதிர்​கொள்​ளும் ராணுவ வீரர்​களின் விவரங்​களைச் சேகரிப்​பது மற்​றும் இந்​தி​யா​விற்​குள் ஆட்​களைச் சேர்ப்​பது தொடர்​பான பணி​கள் இந்​தத் தம்​ப​தி​யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாஹிலும் அவரது மனைவி சமீ​ரா​வும் இன்​ஸ்​டாகி​ராம் தளத்​தில் பாகிஸ்தான் முகவர் ஒரு​வருடன் தொடர்​பில் இருந்​துள்​ளார்.

அந்த முகவர் மூலம் பாகிஸ்​தான் உளவு அதி​காரி​யின் அறி​முகம் கிடைத்​துள்​ளது. பண ஆசை காட்டி தம்​ப​தி​யைத் தங்​கள் வலையில் வீழ்த்​திய உளவு அமைப்​பினர், டெல்​லி​யில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்​ப​தற்​கான உதவியாளர்களைச் சேர்க்​கப் பணித்​துள்​ளனர்.

கடந்த 2024 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் 8 இந்​தி​யச் சிம் கார்டுகளை துபாய் வழி​யாகப் பாகிஸ்​தானுக்கு அனுப்பியதற்காக இத்​தம்​ப​திக்கு ரூ.30,000 பணம் கைமாறியுள்ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. மேலும், அத்தம்​ப​தி​யிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவர்கள் கைது செய்​யப்​பட்​டதன் மூலம் இந்​தி​யப் பாது​காப்பு தொடர்​பான பெரிய உளவுச் சதி முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு சைதன்​யா கூறினார்.

ஐஎஸ்ஐ-க்கு இந்திய சிம் கார்டுகள்: டெல்லியில் இளம் தம்பதி கைது
நேபாளத்தில் உயிரிழப்பு 579 ஆக உயர்வு: 2-வது ஏரி உடைந்து மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in