மேற்காசிய போர் நிறுத்தம் நீட்டிப்பு: இந்தியா வரவேற்பு

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:

“இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாக நிற்கும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை சார்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கும். மேற்காசிய போர் நிறுத்தத்தை இந்தியா ஏற்கெனவே வரவேற்றுள்ளது. அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் இந்த மோதலை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறோம்.

மேற்காசிய மோதல் காரணமாக உலக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையில்லாத வகையில் கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தார். “ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும் வரையில் இந்த போர் நிறுத்தம் தொடரும். அதே நேரத்தில் ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நான் கூறியுள்ளேன்,” என தனது அறிவிப்பில் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் (ஏப்.22) நிறைவடைகிறது. இந்த சூழலில் ட்ரம்ப் இதனை நீட்டித்துள்ளார்.

இந்த சூழலில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல் ஆகும். அதை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் தங்கள் தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் </p></div>
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in