மனிதாபிமான அடிப்படையில் ஆப்கனுக்கு 5 டன் மருந்து வழங்கியது இந்தியா

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கனுக்கு 5 டன் மருந்து வழங்கியது இந்தியா
Updated on
1 min read

புதுடெல்லி: மனி​தாபி​மான உதவி​யாக ஆப்​கானிஸ்​தானுக்கு 5 டன் அத்​தி​யா​வசிய மருந்​துகளை இந்​தியா நேற்று வழங்​கியது.

இது குறித்து வெளி​யுறவுத் துறை அமைச்சக செய்​தித் தொடர்பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் ‘எக்​ஸ்' தளத்​தில் வெளியிட்டுள்ள பதி​வில், ”மனி​தாபி​மான உதவி மற்​றும் ஆப்கானிஸ்​தான் மக்​களின் நல்​வாழ்​வுக்​கான தனது அர்ப்பணிப்பை மீண்​டும் உறு​திப்​படுத்​தும் வகை​யில், இந்​தியா மேலும் 5 டன் அத்​தி​யா​வசிய மருந்​துகளை காபூலுக்கு வழங்கியுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார்.

கடந்த ஜூன் 11ம் தேதி, ஆப்​கானிஸ்​தானின் சுகா​தார அமைப்பை வலுப்​படுத்​து​வதற்​கான இந்​தி​யா​வின் உறுதிப்பாட்டை வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் மீண்​டும் வலியுறுத்​தி​யது. ஆப்​கானிஸ்​தான் மருத்​து​வத் துறை​யினருக்கு நோய் கண்​டறிதல், சிகிச்சை மற்​றும் சிறப்​புப் பராமரிப்​புக்​கான மருத்​துவ உபகரணங்​களைப் பரி​சாக வழங்​கு​வ​தாக​வும் அறிவித்தது. இதில் பச்சிளம் குழந்​தைகளுக்​கான பராமரிப்பு சாதனங்​கள், கார்​டியோகி​ராஃப் இயந்​திரம், வென்​டிலேட்​டர்​கள் மற்​றும் சிறப்பு மருத்​து​வக் கருவி​கள் அடங்​கும்.

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கனுக்கு 5 டன் மருந்து வழங்கியது இந்தியா
நீட் வினாத்தாள் மீண்டும் கசியாமல் இருக்க தேர்வு மையங்களில் 5 லட்​சம் வீரர்கள் பாதுகாப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in