7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

பஞ்சாப் முதல்​வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்​வர் பகவந்த் மான்

Updated on
2 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும் கட்சி தாவும் அபா​யம் உரு​வாகி வரு​கிறது. இது, ராகவ் சத்தா தலை​மை​யில் ஆம் ஆத்மி கட்சி எம்​.பி.க்​கள் பாஜக​வில் இணைந்ததன் தாக்​க​மாகக் கருதப்​படு​கிறது.

டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வாலின் ஆம் ஆத்மி கட்​சிக்கு நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யில் 10 உறுப்​பினர்​கள் இருந்​தனர். இவர்​களில் ஏழு பேர் கட்​சிக்கு எதி​ராக கிளர்ச்சி செய்ய ஒருங்​கிணைந்​தனர். ராகவ் சத்​தா, சந்​தீப் பதக், ஸ்வாதி மாலி​வால், அசோக் மிட்​டல் உள்​ளிட்ட இந்த 7 பேரும் பாஜக​வில் இணைந்​தனர். இந்​தக் கிளர்ச்​சி​யின் தாக்​கம் மக்​களவை மற்​றும் பஞ்​சாப் சட்​டபேர​வை​யிலும் ஆம் ஆத்​மிக்கு எதிராக குரல் ஒலிக்கும் சூழல் உரு​வாகி வரு​கிறது.

மக்​களவை​யில் ஆம் ஆத்​மிக்கு 3 உறுப்​பினர்​கள் உள்​ளனர். பஞ்சாபில் முதல்​வர் பகவந்த் மான் தலை​மையி​லான அரசில் 92 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இவர்​களி​லும் பலர் ஆம் ஆத்​மியை விட்டு வில​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இவர்​கள் அனைவரை​யும் கட்​சி​யில் தக்க வைப்​பது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வாலுக்கு பெரும் சவாலாகிவிட்​டது.

இதனால் ஆம் ஆத்மி கட்​சி​யின் எதிர்​காலம் தற்​போது பெரும் கேள்விக்​குறி​யாகி வரு​கிறது. பஞ்​சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் ராஜ்கு​மார் சப்​பே​வால் (ஹோஷி​யார்​பூர்), குர்​மீத் சிங் ஹேயர் (சங்​ரூர்), மல்​விந்​தர் சிங் காங் (அனந்த்​பூர் சாஹிப்) ஆகியோர் கட்சி தாவும் பட்​டியலில் முன்​னணி​யில் உள்​ளனர். வரும் சில மாதங்​களில், இவர்​கள் பாஜக​வில் இணை​ய​லாம் என கூறப்​படு​கிறது.

இது குறித்து பாஜக​வின் தேசி​யப் பொதுச்​செய​லா​ளர் தருண் சுக் கூறுகை​யில், "ஆம் ஆத்மி கட்சி தனது அடிப்​படை கொள்கைகளில் இருந்து வில​கி​விட்​டது. இதனால், அதன் தலைவர்கள் ஒவ்​வொரு​வ​ராக தற்​போது கட்​சியி​லிருந்து வெளியேற விரும்​பு​கின்​றனர்" என்​றார்.

கடந்த 2022 தேர்​தலில், பஞ்​சாப் சட்​டப்​பேர​வை​யின் 117 இடங்களில் 92 இடங்​களை கைப்​பற்றி ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைத்​தது. இந்த நிலை​யில், மாநிலங்​களவை எம்​பிக்​கள் 7 பேர் ஆம் ஆத்​மியை விட்டு விலகி பாஜக​வில் இணைந்​துள்​ளனர். இவர்​களில் ராகவ் சத்​தா​வும் சந்​தீப் மிட்​டலும் பஞ்​சாபில் ஆம் ஆத்மி கட்​சி​யின் வரலாற்று வெற்​றி​யின் சிற்​பிகளாக திகழ்ந்​தனர்.

பஞ்​சாபில் அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது. இத்​தகைய சூழலில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தனது இருப்பை தக்​க​வைத்​துக் கொள்​வது எளி​தாக இருக்​காது எனத் தெரி​கிறது. இது உடனடி​யாக இல்​லா​விட்​டாலும், குறைந்​தது அடுத்த சில மாதங்​களில் அர்​விந்த் கேஜ்ரி​வாலுக்கு ஒரு சவாலாகவே இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதற்கு விளக்​கம் அளித்த முதல்​வர் பகவந்த் மான், "பஞ்​சாபில் எங்​கள் கட்சி ஒற்​றுமை​யுடன் உள்​ளது. எனது அரசுக்கு எவ்​வித ஆபத்​தும் இல்​லை" என தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p><em>பஞ்சாப் முதல்​வர் பகவந்த் மான்</em></p></div>
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in