டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்: வன்முறை ஏற்பட்டதால் பதற்றம்

டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்: வன்முறை ஏற்பட்டதால் பதற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி துர்க்​மேன் கேட் பகு​தி​யில் உள்ள ஃபைஸ்​-இ-எலாகி மசூதி மற்​றும் அரு​கில் மயானத்தை ஒட்​டி​யுள்ள இடத்​தில் சிலர் சட்​ட​விரோத​மாக கடைகள் மற்​றும் கட்​டிடங்​களை கட்டியிருந்​தனர். இந்த ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற டெல்லி உயர்​ நீதிமன்​றம் உத்​தர​விட்​டது.

அதன்​படி டெல்லி மாநக​ராட்சி ஊழியர்​கள் 30 புல்​டோசர்​களு​டன் சென்று சென்று ஆக்​கிரமிப்​பு​களை நேற்று அகற்​றினர். அப்​போது அங்கு கூடி​யிருந்த சுமார் 150 பேர், பாது​காப்புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸாருடன் மோதலில் ஈடு​பட்​டனர். சிலர் கல்​வீச்சு சம்பவத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் போலீ​ஸார் தடியடி நடத்தியும், கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும் அவர்​களை விரட்​டியடித்​தனர்.

சிலர் கைது செய்​யப்​பட்டு போலீஸ் லாரி​களில் கொண்டு செல்லப்​பட்​டனர். ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்​ட​போது அரு​கில் உள்ள அடுக்​கு​மாடி கட்​டிடங்​களில் குடி​யிருந்​தவர்​கள் பால்கனியில் நின்​றபடி போலீ​ஸாருக்கு எதி​ராக கோஷங்​கள் எழுப்​பினர். இதனால் அப்​பகு​தி​யில் நேற்று பதற்​றம் நில​வியது. இப்​பகு​தி​யில் இருந்த கடைகள் அனைத்​தும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மூடப்​பட்​டிருந்​தன.

மசூ​தியை இடிக்க போகிறார்​கள் என தவறான தகவல் பரப்பப்பட்ட​தால், அங்கு பதற்​றம் நில​விய​தாக கூறப்​படு​கிறது. வன்​முறை​யில் ஈடு​பட்டவர்​கள் மீது போலீ​ஸார் வழக்​கு ப​திவு செய்து வரு​கின்​றனர். ஆக்​கிரமிப்பு அகற்​றப்​பட்ட இடத்​தில் போலீஸார் தடுப்​பு​களை அமைத்​திருந்​தனர். அங்கு பொது​மக்​கள் செல்ல அனு​ம​திக்​கப் ​பட​வில்​லை.

டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றம்: வன்முறை ஏற்பட்டதால் பதற்றம்
சென்னையில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in