கர்நாடக பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு: முதல்வர் சித்தராமையா கண்டனம்

கர்நாடக பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு: முதல்வர் சித்தராமையா கண்டனம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் மாநில ஆளுநர் தாவர்​சந்த் கெலாட் சட்​டப்​பேர​வை​யில் உரை நிகழ்த்​தாமல் அவை​யில் இருந்து வெளி​யேறியது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

கர்​நாடக சட்​டப்​பேர​வை​யின் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் பெங்​களூரு​வில் நேற்று தொடங்​கிய‌து. ஆளுநர் தாவர்​சந்த் கெலாட் அவைக்கு காலை 11 மணிக்கு வந்​தார். அவை தொடங்​கியதும், அரசின் சார்​பில் தயாரித்த உரையை வாசிக்​காமல், தான் தயாரித்து கொண்​டு​வந்த உரை​யில் 2 வரி​களை மட்​டுமே அவர் வாசித்​தார்.

அரசு சார்​பில் தயாரிக்​கப்​பட்ட உரை​யில் மத்​திய அரசுக்கு எதி​ரான கருத்​துகள் இருப்​ப​தாகக் கூறி உரையை வாசிக்க மறுத்​து, ஆளுநர் வெளிநடப்பு செய்​தார். அப்​போது காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் அவரை சூழ்ந்​து​கொண்டு முழக்​கமிட்​டனர். இந்த சம்​பவத்​துக்கு பாஜக எம்​எல்​ஏக்​கள் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா கூறுகை​யில், “ஆளுநரின் இந்த செயல் இந்​திய அரசமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது. அவர் மத்​திய அரசின் கைப்​பாவை​யாக செயல்​படு​கிறார். அரசின் சார்​பில் தயாரிக்​கப்​பட்ட உரை அமைச்​சர​வை​யின் ஒப்​புதலை பெற்​றுள்​ளது. அதனை புறக்​கணிப்​பது சட்ட விதி​முறை மீறலாகும். இதனை வன்​மை​யாக கண்​டிக்​கிறேன்​''என்​றார்.

தமிழ்​நாடு, கேரளா ஆகிய மாநிலங்​களை தொடர்ந்து பாஜக ஆளாத கர்​நாட​கா​விலும் ஆளுநர் வெளிநடப்பு செய்​தது சர்ச்​சையை ஏற்​படுத்​தியுள்​ளது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: முதலில் தமிழகம். அடுத்து கேரளம், இப்​போது கர்​நாட​கா.

இதன் நோக்​கம் தெளி​வானது, வேண்​டுமென்றே செய்​வது. மாநில அரசுகள் தயாரித்​தளிக்​கும் உரையை ஆளுநர்​கள் வாசிக்க மறுத்​து, குறிப்​பிட்ட கட்​சி​யின் முகவர்​கள் போல நடந்​து​கொள்​வது, மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாநில அரசுகளை சிறுமைப்​படுத்​தும் செய​லாகும். நான் முன்பே தெரி​வித்​த​படி, சட்​டப்​பேர​வை​யில் ஆண்​டின் முதல் கூட்​டத்​தொடரை ஆளுநர் உரை​யுடன் தொடங்​கும் நடை​முறைக்கு முடிவு​கட்​டு​வதே இதற்​கான தீர்​வாக அமை​யும்.

இந்​தியா முழு​வதும் இந்த கருத்தை கொண்​டிருக்​கும் அனைத்து எதிர்க்​கட்​சிகளோடும் கலந்​தாலோ​சித்​து, வரும் நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரிலேயே இந்த பயனற்ற, நடை​முறைக்கு பொருந்​தாத வழக்​கத்தை ஒழிப்​ப​தற்கு அரசி​யலமைப்​பில் திருத்​தம் கொண்டு வர திமுக போ​ராடும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

கர்நாடக பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு: முதல்வர் சித்தராமையா கண்டனம்
சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in