

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசியதாவது: பொது சிவில் சட்டம் நாட்டின் அரசியலமைப்பு சட்ட உணர்வையும் அனைவரின் வளர்ச்சிக்கான சிந்தனையையும் வலுப்படுத்தும். தீங்கிழைக்கும் சதித் திட்டங்களில் இருந்து அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தை பாதுகாப்பதும் நமது அரசியலமைப்பு கடமையாகும்.
அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகளின் வலிமையானது இந்தியாவில் அதிகாரம் துப்பாக்கி குண்டு மூலம் அல்லாமல் வாக்குச்சீட்டு மூலம் தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.