ராஜஸ்தான் தங்க மனிதரிடம் ரூ.5 கோடி கேட்டு தாதா கும்பல் மிரட்டல்

ராஜஸ்தான் தங்க மனிதரிடம் ரூ.5 கோடி கேட்டு தாதா கும்பல் மிரட்டல்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தானில் மூன்​றரை கிலோ தங்க நகைகளு​டன் வலம் வரும் கன்​னையா லாலிடம் ரூ.5 கோடி கேட்டு தாதா கும்​பல் மிரட்​டல் விடுத்​துள்​ளது.

ராஜஸ்​தானின் சித்​தோர்​கர் நகரை சேர்ந்த பழ வியா​பாரி கன்​னையா லால் காதிக் (50). தங்க நகைகள் மீது மிக​வும் மோகம் கொண்ட இவர் மூன்​றரை கிலோ நகை அணிந்து வலம் வரு​வது வழக்​கம்.

இதனால் இவரை சித்​தோர்​கரின் தங்க மனிதர் மற்​றும் சித்​தோர்​கரின் பப்பி லஹிரி என்​றும் அழைக்​கின்​றனர். மறைந்த பிரபல இசை அமைப்​பாளர் பப்பி லஹரி, எப்​போதும் அதிக நகைகள் அணிந்​திருந்​தார். அவரை பார்த்​து​தான் தனக்​கும் அந்த ஆர்​வம் வந்​த​தாக கன்​னையா லால் அடிக்​கடி கூறு​வார்.

இந்​நிலை​யில் தாதா ரோகித் கொடாரா கும்​பலிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டு தனக்கு மிரட்​டல் வந்​துள்​ள​தாக கன்​னை​யாலால் புகார் அளித்​துள்​ளார்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இரண்டு நாட்​களுக்கு முன்பு கன்​னையா லாலுக்கு வாட்ஸ் அப் மற்​றும் போனில் மிரட்​டல் வந்​தது. அதில் ரூ.5 கோடி தரா​விட்​டால் தங்க நகைகள் அணி​யும் நிலை​யில் நீ இருக்க முடி​யாது. இந்த விஷ​யத்தை அமை​தி​யாக தீர்த்​துக்​கொள்ள வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது. இது குறித்து நகரின் கோட்​வாலி காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது’’ என்று தெரி​வித்​தனர்.

ராஜஸ்​தானின் பிகானீர் பகு​தியை சேர்ந்​தவர் தாதா ரோகித் கொடா​ரா. இவர் மீது நாட்​டின் பல்​வேறு காவல் நிலை​யங்​களில் 32-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் உள்​ளன. இவர் தற்​போது கனடா​வில் இருப்​ப​தாக நம்​பப்​படு​கிறது. இவர், ராஜஸ்​தானில் தொழில​திபர்​களை மிரட்டி பணம் பறித்து வந்​தார். பஞ்​சாபில் கடந்த ஆண்டு பிரபல ராப் பாடகர் சித்து மூசே வாலா கொலை​யில் இவர் மீதும்​ குற்​றம்​ சாட்​டப்​பட்​டுள்​ளது.

ராஜஸ்தான் தங்க மனிதரிடம் ரூ.5 கோடி கேட்டு தாதா கும்பல் மிரட்டல்
தேர்தல் ஆணையருடன் திரிணமூல் பிரதிநிதிகள் சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in