வருமான வரித் துறை வேலை என்ற பெயரில் உ.பி.யில் பல லட்சம் மோசடி செய்த கும்பல்

வருமான வரித் துறை வேலை என்ற பெயரில் உ.பி.யில் பல லட்சம் மோசடி செய்த கும்பல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லியைச் சேர்ந்த ஒரு கும்​பல், அரசுப் பணி பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி பல மாநிலங்​களில் மோசடி செய்து வந்​துள்​ளது. அரசு அதி​காரி பணிக்​காக போட்​டித் தேர்வு எழுதும் இளைஞர்​களை இவர்​கள் குறி வைத்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் வரு​மான வரித் துறை மூத்த அதி​காரி​கள் போல இளைஞர்​களிடம் நடித்த இவர்​கள் லஞ்​சப் பணத்​துக்கு அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக உறுதி அளித்​துள்​ளனர். இதற்​காக மத்​திய வரு​மான வரித்​துறை இணை​யதளம் போன்று போலி இணை​யதளம் உரு​வாக்கி உள்​ளனர்.

அதன்​மூலம் தேர்வு அறி​விப்பை வெளி​யிட்டு விண்​ணப்​பம் மற்​றும் பிற செல​வு​கள் என்ற பெயரில் பணம் வசூலித்​துள்​ளனர். பின்​னர் அவர்​கள் வரு​மான வரித் துறை பெயரில் போலித் தேர்​வு​களை டெல்​லி​யில் தனி​யார் இடங்​களில் நடத்தி உள்​ளனர்.

இந்த கும்​பலிடம் ரூ.30 லட்​சம் ரொக்​க​மாக கொடுத்து உ.பி.​யின் பிஜ்னோர் மாவட்​டம் ஷேர்​பூர் கிராமத்​தைச் சேர்ந்த பிரஜ்வீர் சிங் என்​பவரும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார்.

இவரது புகார் மீது பிஜ்னோர் போலீ​ஸார் நடவடிக்கை எடுக்​காத​தால் மாவட்ட தலைமை நீதி​மன்​றத்தை அணுகி​னார். இப்​போது நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் பிஜ்னோரின் நங்​கல் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து மோசடிக் கும்​பலைத் தேடி வரு​கின்​றனர்.

இதுகுறித்து பிரஜ்வீர் சிங் கூறுகை​யில், ‘‘எங்​களை நம்ப வைப்​ப​தற்​காக எங்​கள் செல்​போன்​களுக்கு ஒடிபி.களும் அனுப்​பினர். பணி நியமனத்​தின் பேரில் எங்​களுக்கு வரு​மான வரித்​துறை போலி அடை​யாள அட்​டைகளும் வழங்​கப்​பட்​டன. பணிக்​கான பாது​காப்​புத் தொகை எனும் பெயரில் ரொக்​க​மாக ரூ.10 லட்​ச​மும் வசூலித்​தனர். ஆனால், எந்த அலு​வல​கத்​தில் பணி என்று குறிப்​பிட​வில்​லை.

நான் டெல்​லி​யில் மத்​திய வரு​மான வரித்​துறை தலைமை அலு​வல​கத்​துக்கு நேரில் சென்று விசா​ரித்​தேன். அப்​போது​தான் உண்மை தெரிய​வந்​தது. எனது காவல்​துறை புகாருக்கு பிறகு மோசடி கும்​பலிடம் இருந்து எனக்கு கொலை மிரட்​டல்​களும் வந்​தன’’ என்று தெரி​வித்​தார்.

வரு​மான வரித்​துறை மட்​டுமின்றி வேறு சில அரசுத் துறை​களி​லும் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பல்​வேறு மாநிலங்​களில் இக்​கும்​பல் பலரை ஏமாற்​றி​யுள்​ளது. பொய் வழக்கு போடு​வோம் என பா​திக்​கப்​பட்​ட​வர்​களை மோசடிக் கும்​பல் மிரட்​டிய​தால் புகார் அளிக்​க பலரும்​ அஞ்​சி​யுள்​ளனர்​.

வருமான வரித் துறை வேலை என்ற பெயரில் உ.பி.யில் பல லட்சம் மோசடி செய்த கும்பல்
பரிசுப் பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்த வழக்கில் இம்ரான் கான், மனைவிக்கு 17 ஆண்டு சிறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in