ரூ.1,000 கோடி மோசடி செய்த சூதாட்ட செயலிக்கு விளம்பரம்: கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் சொத்துகள் முடக்கம்

ரூ.1,000 கோடி மோசடி செய்த சூதாட்ட செயலிக்கு விளம்பரம்: கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் சொத்துகள் முடக்கம்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி​யில் ஈடு​பட்ட சூதாட்ட செயலிக்கு ஆதர​வாக ஊடகங்​களில் விளம்​பரம் செய்த கிரிக்​கெட் வீரர்​கள்யுவ​ராஜ் சிங், ராபின் உத்​தப்​பா, நடிகைகள் மிமி சக்​ர​வர்த்​தி, நேகா சர்​மா, நடிகர்​கள் சோனு சூட், அங்​குஷ் ஹஸ்ரா ஆகியோரது ரூ.7.93 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது.

சை்​ரஸ் நாட்டை சேர்ந்த ‘1 எக்ஸ் பெட்’ என்ற சூதாட்ட செயலிக்கு இந்​தி​யா​வில் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், இந்த செயலி சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வில் கால் பதித்​தது. இதன் விளம்பர தூதர்​களாக இந்​தி​யா​வின் முன்​னணி நட்​சத்​திரங்​கள் களமிறக்​கப்​பட்​டனர். அவர்​களது கவர்ச்​சிகர​மான விளம்​பரங்​களை நம்பி ஏராள​மான இந்​தி​யர்​கள் இந்த செயலி​யில் பெரும் தொகையை இழந்​தனர். இந்த செயலி வாயி​லாக இந்​தி​யா​வில் சுமார் ரூ.1,000 கோடிக்​கும் அதி​க​மாக மோசடி நடந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இந்த சூழலில், சூதாட்ட செயலிக்கு ஆதர​வாக விளம்​பரம் செய்த நட்​சத்​திரங்​களிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அந்த வகை​யில், கிரிக்​கெட் வீரர்​கள் யுவ​ராஜ் சிங், ராபின் உத்​தப்​பா, மேற்​கு​வங்க நடிகை மிமி சக்​ர​வர்த்​தி, பாலிவுட் நடிகை நேகா சர்​மா, பாலிவுட் நடிகர் சோனு சூட், மேற்கு வங்க நடிகர் அங்​குஷ் ஹஸ்ரா ஆகியோரிடம் கடந்த பல மாதங்​களாக தீவிரவிசா​ரணை நடத்​தப்​பட்​டது.

இதன் அடிப்​படை​யில் அவர்​களது ரூ.7.93 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது. இதே வழக்கு தொடர்​பாக கடந்த ஜூன் மாதம் கிரிக்​கெட் வீரர்​கள் ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா ஆகியோரது ரூ.11.14 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் முடக்​கப்​பட்​டன. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ​பாலிவுட் நடிகர் சோனு சூட்​டுக்கு சொந்​த​மான ரூ.1 கோடி சொத்​துகள், மிமி சக்​ர​வர்த்​தியின் ரூ.59 லட்​சம், யுவ​ராஜ் சிங்கின் ரூ.2.50 கோடி, நடிகை நேகா சர்​மாவின் ரூ.1.26 கோடி, ராபின் உத்​தப்​பாவின் ரூ.47 லட்​சம், மேற்​கு​வங்க நடிகர் அங்​குஷ் ஹஸ்​ரா​வின் ரூ.47 லட்​சம் மதிப்​புள்ள சொத்​துகள் முடக்​கப்​பட்டுள்ளன. நடிகை ஊர்​வசி ரவுடேலா​வின் தாய்க்கு சொந்​த​மான ரூ.2.02 கோடி சொத்​துகளும் முடக்​கப்​பட்டுள்ளன. இவ்​வாறு அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

ஆன்​லைன் சூதாட்ட செயலி தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் சமீபத்​தில் விரி​வாக விளக்​கம் அளித்​தார். அவர் கூறும்​போது, ‘‘இந்​தி​யா​வில் ஆன்​லைன் சூதாட்ட செயலிக்கு பலர் அடிமை​யாகி தங்​களது வாழ்​நாள் சேமிப்பை இழக்​கின்​றனர். இந்த விவ​காரத்​தில் தற்​கொலை சம்​பவங்​களும் அதி​கரித்து வரு​கின்​றன.

இந்​தி​யா​வில் மட்​டும் ஆன்​லைன் செயலிகளால் சுமார் 45 கோடிக்​கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரூ.20,000 கோடி அளவுக்கு மோசடி நடந்​துள்​ளது. ஆன்​லைன் சூதாட்ட செயலிகளால் நாட்​டின் பாது​காப்​புக்​கும் அச்​சுறுத்​தல்​ எழுந்​துள்​ளது. இத்​தகைய செயலிகள்​ மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டு வரு​கிறது’’ என்​று தெரி​வித்​​தார்​.

ரூ.1,000 கோடி மோசடி செய்த சூதாட்ட செயலிக்கு விளம்பரம்: கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் சொத்துகள் முடக்கம்
மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in