உ.பி.யில் வளர்ப்பு நாய் இறந்த கவலையில் பட்டதாரி சகோதரிகள் தற்கொலை

உ.பி.யில் வளர்ப்பு நாய் இறந்த கவலையில் பட்டதாரி சகோதரிகள் தற்கொலை
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி.​யில் வளர்ப்பு நாய் இறந்த கவலை​யில் பட்டதாரிகளான இரு சகோ​தரி​கள் தற்​கொலை செய்​து​கொண்​டனர்.

லக்​னோ​வின் ஜலால்​பூர் பகு​தி​யில் உள்ள தோதா கிராமத்​தில் ராதா சிங் (24), ஜியா சிங் (22) எனும் சகோ​தரி​கள் தங்​கள் குடும்​பத்​துடன் வசித்து வந்​தனர். இவர்​கள் சிறு​வயது முதல் டோனி எனும் பெயரில் ஜெர்​மன் ஷெப்​பர்ட் வகை நாயை வளர்த்து வந்​தனர். இதன் மீது அளவுக்​கடந்த பாசம் வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில் 6 மாதங்​களுக்கு முன் டோனி நோய்​வாய்ப்​பட்டு இறந்​தது.

அப்​போது முதல் சகோ​தரி​கள் இரு​வரும் சோகத்​தில் மூழ்​கினர். இதன் உச்​ச​மாக நேற்று இரு​வரும் பினா​யில் திர​வத்தை குடித்​தனர். இதையடுத்து இரு​வரும் ராணி லட்​சுமி​பாய் அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். ஆனால் வழி​யிலேயே ராதா உயி​ரிழந்​தார். ஜியா சிகிச்சை பலனின்றி இறந்​தார்.

உடல்​நலம் குன்​றிய டோனிக்கு தொடக்​கத்​தில் இருந்தே சிகிச்சை அளித்​தும் அதன் நிலைமை மேம்​பட​வில்​லை. இது அவர்களை மன அழுத்​தத்​தில் ஆழ்த்​தி​யது. இதில் இளைய சகோ​தரி​யான ஜியா சிங் முதலில் மனநலம் பாதிக்​கப்​பட்​டார். டோனி இறந்த பிறகு ராதா​வும் மனச்​சோர்வு அடைந்​தார். நாயின் இறப்​பால் பொதுச் சமூகம் மற்​றும் குடும்​பத்​திட​மிருந்து முற்​றி​லு​மாக வில​கி, இரு​வரும் தனிமை​யில் வாழ்ந்து வந்​தனர்.

இதுகுறித்து சகோ​தரி​களின் தந்தை கைலாஷ் சிங் (65) கூறுகை​யில், ‘‘டோனி உயிருடன் இருக்​கும்​போதே அது உணவருந்​​தாத நாளில் இரு​வரும் உணவருந்​த​வில்​லை. அது இறந்​த பிறகு இரு​வரும் வீட்​டில் தனி அறை​யில் வாழ்ந்​தனர். யாரிடமும் பேசுவதை நிறுத்தி விட்​டனர். செல்​போனும் பயன்​படுத்​த​வில்​லை.

இது​போன்ற பழக்​கத்​தால் அவர்​களுக்கு பேய், பிசாசு பிடித்​திருக்​கும் என்ற சந்​தேக​மும் வந்​தது. இதற்​காக மருத்​து​வ​மனைக்​கும் மந்​திர​வா​தி​களிட​மும் அழைத்​துச் சென்​றும் பலனில்​லை” என்​றார்.

இந்த சம்​பவத்தை காவல்​துறை தற்​கொலை வழக்​காக பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது. வளப்பு நாய்க்​காக உயிர்​விட்ட பட்​ட​தாரி சகோ​தரி​கள் என சமூக வலை​தளங்​களி​லும்​ இத்​தகவல்​ வைரலாகி வருகிறது.

உ.பி.யில் வளர்ப்பு நாய் இறந்த கவலையில் பட்டதாரி சகோதரிகள் தற்கொலை
சபரிமலையில் இன்று மண்டல பூஜை: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வழிபாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in